ஓய்வூதியம் என்பது ஒருவர் வயது மூப்பின் காரணமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் தன்னுடைய மற்றும் அவரை நம்பி இருக்கின்ற அவருடைய குடும்பத்தினருடைய வாழ்வாதாரத்தை பாதுக்காப்பதற்காக க் கொடுக்கப்படும் நிதி ஆகும். இது MLA க்களுக்கு பொருந்தாது. ஏனெனில் அவர்கள் பதவிக்காலம் முடிந்த பின்பு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வென்று MLA ஆக முடியும் . இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றார்கள் . அரசு ஊழியர்கள் அப்படி புதிய பணிபெறமுடியாது . MLA க்கள் தங்களுடைய பதவிக்காலத்தில் அளவுக்கு மீறிய அளவில் சம்பாதித்து விடுகின்றார்கள் ..அரசியல் என்பது மக்களுக்கான சேவை. சில பல சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் சேவைக்காக வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் பெறுவது தவறு. .MLA க்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள இது போல இன்ப அதிர்ச்சி தரக்கூடிய அறிவிப்புக்களை அவ்வப்போது அறிவிக்கவேண்டிது அவசியமாகின்றது .ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி மக்களும் இதை க் கடந்து தான் செல்லவேண்டும்
No comments:
Post a Comment