Saturday, May 3, 2025

  இந்தியா தடையின்றி முன்னேறவேண்டும் ,தன்னிறைவு பெற்று ஒரு வல்லரசு நாடாக விளங்கவேண்டும் , உலக மக்களுக்கு இந்தியா ஒரு சுபிட்சமான நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது நம் ஒருமித்த விருப்பம் என்றாலும் அது எல்லோரிடத்திலும் வெறும் எண்ணங்களாக மட்டும் முடங்கிப் போயிருக்கின்றது . எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் தெளிவான உறுதியான நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் இது என்றைக்கும் கனவுலகக் கொள்கையாக மட்டுமே இருக்கும் . முதலில் அதிகாரமிக்க, செயல்களை மக்களிடையே முடுக்கிவிடும்.வாய்ப்புள்ள ஆட்சியாளர்கள் மாறவேண்டும். அவர்களுக்கு நாடும் நாட்டு மக்களும் தான் முக்கியமே ஒழிய எதிர்க்கட்சியினர் இல்லை. அவர்களுடைய செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை உடையதாக இருந்தால் , மக்களுக்கு பயனு ள்ளதாக இருந்தால் , தன்னலத்தை மறைவு இல்லாதிருந்தால் அவைகளுக்கு விளம்பரம் தேவையில்லை . விமர்சனங்களும் எழுவதில்லை .மக்கள் ஆதரவு இயல்பாகவே வளர்ந்துவிடும் . மாறாக அதிகாரம் என் கையில் ,என் முடிவே மகேசன் முடிவு என்று ஆணவத்துடன் செயல்பட்டால் , நல்லாட்சியை ஒருநாளும் ஏற்படுத்தமுடியாது ,. ஆட்சியாளர்கள் தங்களுடைய சேவையை விரிவு படுத்தவும் ,மக்களிடம் கொண்டு சேர்க்கவும் திட்டமிடும் போது பொதுநலத்தில் அக்கறையுள்ள ,தன்னலமற்ற தொண்டர்களை இணைத்துக்கொள்ளவேண்டும் .அவ்வப்போது அவர்களுடைய நேர்மைத்தனத்தை மதிப்பீடு செய்து தகுந்த திருத்தங்களைச் செய்யவேண்டும். மக்கள் நலனில் அக்கறை காட்டாத ,பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதிகாரிகளைக் கண்காணித்து களையெடுக்கவேண்டும். .தீயவர்களாக இருந்துகொண்டு தீயவர்களை யும் சேர்த்துக்கொண்டு தீமைகளை செய்து கொண்டே இருந்தால் நாடு இனி திருத்தவே முடியாது என்ற இழி நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் . காவல்துறையும் ,நீதித்துறையும் மக்களின் பாதுகாப்புக்கானது . ஆட்சியாளர்கள் அதை அவர்களுடைய மறைவொழுக்க நடவடிக்கை களுக்கு பாதுகாப்புக் கவசமாக மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடாது . ஏனெனில் இதை எதிர்கட்சியினரும் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் செய்ய வாய்ப்பிருப்பதால் .ஆட்சியாளர்களாலும்  எதிர்கட்சியினராலும் நாடு சீரழிந்து போவதற்கான வாய்ப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

No comments:

Post a Comment