மக்களில் பெரும் பணக்காரர்கள் ,நடுத்தர மக்கள் , ஏழை என்று மூன்று பிரிவினர் நீண்டகாலமாக மாற்றமின்றி இருந்து வருகின்றார்கள். பணக்காரர்களுக்கு அளவுக்கு மீறிய கடன் மற்றும் சலுகைகள் கொடுத்து , தேர்தல் காலங்களில் பயன்படுத்திக்கொள்ளவும் , அவர்களுடைய நிறுவங்களின் முதலீடு செய்யாமலேயே பங்குதாரர்களாக இணையவும் ,தவறான வழிகளில் பெற்ற சம்பாத்தியங்களை பாதுகாப்பாக முதலீடு செய்யவும் நட்புக்கொள்கின்றார்கள். இவர்கள் கட்டும் வரியை விட வாங்கிய வங்கிக் கடன் அதிகம் , கடன் தள்ளுபடியும் அதிகம் . வரியே சிறிதும் கட்டமுடியாத அளவிற்கு வாழும் ஏழைகளைகளின் உழைப்பை ச் சுரண்டிவிட்டு ,அவர்கள் அப்படி வாழ்வதற்கு இந்த அரசாங்கம் காரணமில்லை என்றும் , வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல அவ்வப்போது வள்ளல் போல மக்கள் வரிப்பணத்தில் இலவசங்களை அள்ளி வீசுகிறார்கள் . இதற்காக ஒதுக்கிய நிதியில் பாதி அளவுகூட மக்களைச் சென்றடைவதில்லை . இடையிலேயே அரசியல்வாதிகளாலும் ,அதிகாரிகளினால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன . செல்வந்தர்களுக்கு கடன் மற்றும் சலுகைகள் கொடுப்பதற்கும் , ஏழைகளுக்கு இலவசங்கள் கொடுத்து கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்கும் ஒட்டு பெறுவதற்கும் ,பலிஆடுகளாக இருப்பது நடுத்தர மக்களே . பணக் காரர்களாகி விடுவோம் என்று நேர்மையாக உழைத்து ப் பெற்ற சம்பாத்தியத்தில் பாதிக்கு மேல் வரி வரி என்று கட்டி ஏழையாகிவருகின்றார்கள் . அரசாங்கம் இருக்கும் நிதிக்கு ஏற்ப திட்டம் போடவேண்டும் . திட்டத்திற்கு ஏற்ப வரி விதிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் . நாட்டின் வளத்தை மேபடுத்தி ,தொழில்துறையில் புதுமை புகுத்தி ,வர்த்தகத்தை ப் பெருக்கி நாட்டு மக்களின் நலனை பாதுகாத்து மேம்படுத்துவதே உண்மையான ஆட்சியாளர்களின் கொள்கை . இதில் மாறுபட்ட கருத்துவேறெதுவும் இருக்கமுடியாது
No comments:
Post a Comment