அரசியல்வாதிகள் தரும் இலவசகங்களுக்காக சொந்த உழைப்பை மறந்து இழந்து வாழும் மக்களை ப் பார்க்கும் போது,அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதைதான் என் நினைவைத் தொடுகின்றது .மக்கள் எல்லோரும் எப்போதும் உழைத்து வாழ்ந்தால் நாட்டை ஆள்வதற்கு ஒரு தலைவன் தேவைப்படுவதில்லை . நாட்டில் மிகுந்து வரும் ஏழைகள் ,பிச்சைக்காரர்கள் , வேலை இல்லாதவர்கள் , தீயவர்கள் ,குற்றவாளிகள் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு ஒரே தீர்வு இருக்கின்றது. அதை ஆள்பவர்கள் தெரிவிக்க வோ செயல்படுத்தவோ மாட்டார்கள் . எல்லோரும் எபோதும் உழைத்து வாழ்வதுதான் அந்த மகத்தான தீர்வு.. அதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் .
No comments:
Post a Comment