Wednesday, February 23, 2011

Arika ariviyal-

இசைக் கவைக்கு ஏன் இரு அதிர்வுறும் தண்டுப் புயங்கள் ?




ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடன் அதிர்வுறுமாறு இசைக்
கவைகளை உற்பத்தி செய்ய முடியும் .இவை ஒலியியல்
தொடர்பான சோதனைகளில் பயன்படுத்தப் படுகின்றன .
இரு அதிர்வுறும் தண்டுகள் இருக்குமாறு இசைக் கவைகள்
உற்பத்தி செய்யப்படுவதேன் ?

                                         *****************

அதிர்வுறும் இசைக்கவையை நாம் தேவையான
இடத்திற்கு எடுத்துச்செல்கிறோம் . இந்த இடப்
பெயர்ச்சியினால் அதன் அதிர்வெண்ணில் மாற்றம்
ஏதும் ஏற்படக்கூடாது . அதாவது ஒரு முறை
கிளர்சியூட்டப்பட்ட இசைக்கவையின்
அதிர்வெண் மாறாதிருக்க வேண்டும் .
இசைக்கவை அதிர்வுறும் போது அதன் கணு 
கைபிடியின் சந்திப்பில் அமைகிறது . இது அதன்
ஈர்ப்பு மையமாகவும் உள்ளது . அதனால்
அந்த அமைப்பு இரு அதிர்வுத் தண்டுகளுடன்
நிலையாகத் தொடர்ந்து அதிர்வுறுகிறது.
ஒரேயொரு அதிர்வுத் தண்டு மட்டும்
இருக்குமெனில் ,ஈர்ப்பு மையம் கைப்பிடியின்
சந்திப்பில் அமைவதில்லை. அதனால் ஈர்ப்பு
மையம் அதிர்வுக்கு ஏற்ப அலைவுறுகிறது .
இது அமைப்பின் நிலைப்புத் தன்மையைக்
குறைத்து விடுகிறது .











1 comment:

  1. நான் படித்ததை மீண்டும் நினைவு படுத்தி விட்டிர்கள் சார் ...
    நன்றி

    ReplyDelete