Wednesday, February 23, 2011

arika iyarppiyal

ஒத்த ஒலி அலைகள் சந்தித்தால்





ஒலி ஊடகத்தில் அலைகளாகப் பரவுகின்றது .அலை என்பது
கால முறைப்படி வழித்தடத்திலுள்ள ஊடகத் துகள்கள் அலைவுறுவதாகும்.இதனால் அலையில்
அடுத்தடுத்து அகடுகளும் முகடுகளும் மாறி மாறி
அமைந்திருக்கும் எனலாம்
ஒரே அதிர்வெண்ணும் அலைக்கட்டமும் கொண்ட இரு
ஒலி அலைகளை ஒத்த ஒலி அலைகள்(Coherent) என்பர் .
ஒத்த இரு ஒலி அலைகளின் முகடுகள் கூடும் போது
ஒலிச்செறிவு நான்கு மடங்கு அதிகரிக்கின்றது .
ஒன்றின் முகடும் மற்றதின் அகடும் கூடும்போது
ஒலிச் செறிவு சுழியாகி விடுகின்றது .இதை முறையே
ஆக்கக் குறுக்கீடு(Constructive interference) ,அழிவுக் குறுக்கீடு
(destructive interference)என்பர். அழிவுக் குறுகீட்டில்
கூடும் இரு ஒலி அலைகளின் ஆற்றல் என்னவானது ?

                                          ****************

அழிவுக்குறுகீட்டில் இரு அலைகளின் அலைவீச்சும்
இணைந்து சுழியாக்கப்படுகிறது .ஆனால் ஒலி,
அலையால் கடத்தி எடுத்துச் செல்லப்படும் திறன் ,
அதாவது புலச்செறிவு மற்றும் ஒலிஅலைத் தடை
(acoustic wave impedance) இவற்றின் பெருக்கல் பலன் ,
அலை மேற்பொருந்துவதினால் தீர்மானிக்க
முடிவதில்லை .

Z (1 ) என்பது காற்றில் ஒலிஅலைமைத் தடை என்றும்
Z (2 ) என்பது ஒலிவாங்கியின் ஒலிஅலைமைத் தடை
என்றும் கொண்டால் ,இவற்றின் தகவு
Z (1 )/Z (2 ) = 1 என்ற நிலையில் ஆற்றல் முழுதும்
கடத்தி எடுத்துச் செல்லப்படுகிறது. ஏதும்
எதிரொலிக்கப் படுவதில்லை என்று கொள்ளலாம்.
அழிவுக் குறுகீட்டில் Z (1 )/Z (2 ) = ௦ 0ஆகும். அதாவது
ஏதும் கடத்திச் எடுத்துச் செல்லப் படுவதில்லை.,
முழுதும் எதிரொலிக்கப் படுகிறது .





No comments:

Post a Comment