Wednesday, February 16, 2011

Arika Iyarpial

மூடு பனிக் கால ஊது கொம்பு


மூடு பனி நிறைந்த கடல் பகுதியில் கப்பல் செல்லும்
போது வருவதை உணர்த்துவதற்கு ஊது கொம்புகளைப்  பயன்படுத்துவார்கள் .இது பெரும்பாலும் தாழ்ந்த சுரத்தில்
ஒலி எழுப்புவதாக அமைக்கப்பட்டிருக்கும் . ஏன் ?
                                           *******************
உயர் சுரத்தைவிட,தாழ்ந்த சுரங்கொண்ட ஒலி நெடுந்
தொலைவு வரை கேட்கிறது .ஒலி அலை ஊடுருவிச்
செல்லும் போது அதன் ஆற்றலில் ஓரளவு வெப்ப
ஆற்றலாக மாற்றம் பெறுகிறது .இது உயர்அதிர்வெண்,
ஒலி அலைகளுக்கு அதிகமாக இருக்கின்றது. கடலில்
கப்பல் நகர்ந்து செல்லும் போது ,விபத்துக்களைக்
தவிர்த்துக் கொள்ள செல்லும் திக்கை வேறு
படுத்துவதற்கு ஏதுவாக பரந்தவெளி தேவைப்படுகிறது .
அதனால் ஓரளவு நெடுந் தொலைவிற்கு அப்பால்
உள்ளவர்களும் கேட்கும்படி ஊது கொம்பு
தாழ்ந்த சுரம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் .




No comments:

Post a Comment