Friday, February 25, 2011

Arika ariviyal

ஒட்டிய பாத்திரங்களை வெட்டியா பிரிப்பது ?




சில சமயங்களில் சிலர் ஒன்றுக்கொன்று நெருக்கமாக
ஒட்டிக் கொண்டிருக்கும் இரு திண்மப் பொருட்களைப்
பிரித்தெடுக்க போராடிக் கொண்டிருப்பார்கள் . ஒட்டிய
இரு பாத்திரங்கள் ,இறுகிய மூடிகளைப் பாதிப்பின்றி
பிரித்தெடுக்க முடியுமா ?

ஒட்டிய பாத்திரங்களை வெட்டியா பிரிப்பது ?

                                 **************


இரு பொருட்களில் ஒன்றை வெப்பஞ்சார்ந்த பெருக்கம்
அல்லது வெப்பஞ் சார்ந்தசுருக்கம் மூலம் விரிய அல்லது
சுருங்கச் செய்து பிரித்தெடுக்கலாம் .இரு பாத்திரங்கள்
எனில், வெளிப் பாத்திரத்தை சுடுநீர் மூலம் விரிவாக்கத்திற்கு உட்படுத்தல்லாம் .அல்லது உள் பாத்திரத்தை குளிர் நீர்
மூலம் வெப்பச் சுருக்கத்திற்கு உட்படுத்தலாம் .அப்போது
ஒரு சிறிய இடைவெளி ஒட்டிக்கொண்டிருக்கும் இரு
பரப்புகளுக்கிடையே ஏற்படுவதால் எளிதாகப்
பிரித்தெடுக்க முடிகிறது மூலப் பொருள்களுக்கு
அழிவாக்கமற்ற அணுகு முறையாக இது உள்ளது .

No comments:

Post a Comment