Friday, February 18, 2011

Vanna vanna ennangal

விழித்தெழு



அப்போது இரவுகூட இல்லை

உலகில் நடப்பதையெல்லாம்

வெளிச்சமிட்டுக் காட்ட

ஆதவன் கூட அங்கிருந்தான் .

தனியே பெண்ணொருத்தி

தன பிள்ளையை இடுப்பிலேந்தி

ஆலயம் நோக்கிச் சென்றாள்



எங்கிருந்தோ ஒரு முரடன்

விரைந்து அருகில் வந்தான்

கழுத்தில் மின்னிய தங்கத் தாலியை

அறுத்துக் கொண்டு ஓடினான்

அலறிச் சத்தமிட்டும்

அவளுக்கு உதவ யாருமில்லை

அபலையானாள் அவள்



காவலனிடம் போய்ச் சொன்னாள்

வழக்குப் பதியக் காசு

திருடனைத் தேடக் காசு

ஆறு மாசம் அலைந்து அலைந்து

அடங்கியதுதான் மிச்சம்

காவலன் நினைத்தால்

கண்டுபிடிக்க முடியும்

கண்டுபிடித்தால் தலைவர்

பிறந்த நாளில் தங்கமில்லா

ஒரு பதக்கத்தை மார்பிலே

குத்தி சாதனை என்பார்கள்

திருடனோடு தொடர்பு கொண்டால்

திருட்டிலே ஒரு பங்கு

முன்னேறுவதற்கு இதைவிட

ஒரு நல்ல வழி எங்கே கிடைக்கப்போகிறது

முரடன் முன்னேறினான்

காவலனும் முன்னேறினான்

ஆனால் சமுதாயம் பின்னேறியதை

அவர்கள் அறியவில்லை

ஒரு முரடன் தான் இருந்தான்

ஒன்று இரண்டாகி ,இரண்டு நான்காகி

நான்கு நாற்பதாகி ,நாற்பது இப்போது

நாலு இலட்சமாகிவிட்டது .

மக்கள் முரடனாய் வாழ்வதுதான்

மக்களுக்குப் பாதுகாப்பு

என்ற எண்ணம் நிலைத்துவிட்டால்

சமுதாயமே முரடாகிவிடாதா

காவல் துறையே

நீதித் துறையே

இந்த இனிய

சமுதாயம் இறந்து வாழ்வதற்கு முன்

விழித்தெழு

நிமிர்ந்து நில்

நிமிர்த்து வை

அது உன் கடமை மட்டுமல்ல

அதுதான் உனக்குப் பெருமை

சாகாத சமுதாயத்திற்கும் பெருமை



No comments:

Post a Comment