Saturday, July 23, 2011

eluthaatha kaditham

மக்களிடையே பெருகி வரும் மாற்றுத் திறனாளிகள்


உடல் உறுப்புகளில் ஒன்றை இழந்தவரை ஊனம் என்று

சொன்னால் அது அவர் மனதைப் புண்படுத்தும் என்று

மாற்றுத் திறனாளி என்றொரு மாற்றுச் சொல்லை

உருவாக்கினார்கள் .இது ஒரு விதத்தில் சரியானதே .

ஏனென்றால் ஊனமுற்றோர் பெரும்பாலும் தங்கள்

திறமையை வேறொரு விதத்தில் வெளிப்படுத்திக்காட்டும்

வலிமையை வளர்த்துக் கொண்டு விடுகிறார்கள்



உடல் ஊனமாக இருந்தாலும் மனம் ஊனமாக

இல்லாதிருந்தால் அவர் இந்த மாற்றுத் திறனை

சுயமாக வளர்த்துக் கொண்டு பிற்காலத்தில்

சிறப்பாக வெளிப்படுத்திக் காட்ட முடியும் .

இதற்ககு ஹெலன் கெல்லர் சரியான எடுத்துக்காட்டு

இவர் குழந்தையாக இருந்த போது நோய்வாய்ப்பட்டு

பார்வை,பேச்சு,கேட்கும்திறன் எல்லாவற்றையும்

இழந்தார் .எனினும் மனம் தளராமல் படித்து பல்கலை

கழகத்தில் பட்டம் பெற்றார். .சமுதாயத்தில் எழுச்சியைத்

தூண்டும் வண்ணம் பல கட்டுரைகளை எழுதினார். .

ஆதரவற்ற மக்களின் குரலை எதிரொலித்து அவர்களின்

மேம்பாட்டிற்காக மிகுந்த பொருள் திரட்டிக் கொடுத்தார் .

பார்வை இழந்தவர்களின் மறுவாழ்விற்காக உதவுவதை

தன வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் .

பார்வை,பேச்சு, கேட்கும்திறன் இல்லாத ஒரு

பெண்மணியால் இப்படி சாதிக்க முடிகிறது என்றால்

எல்லா உடல் தகுதிகளையும் சக்தியும் கொண்ட

நம்மால் என்னென்னவெல்லாம் சாதிக்கமுடியும்.?

என்னுடைய பார்வையில்இந்த உண்மையான

மாற்றுத் திறனாளிகலிருந்து வேறுபட்டு போலியான

மாற்றுத் திறனாளிகள் இன்றைக்கு சமுதாயத்தில்

வெகுவாக அதிகரித்து வருகிறார்கள் .

உறுப்பை இழந்து உடலால் ஊனமாகி அவ்வுறுப்பால்

பயன் பெறமுடியாததால் திறமையை வேறு

விதங்களில் வளர்த்துக் கொண்டு வெளிப்படுத்துவோரை

நேர்மறை (Positive ) மாற்றுத் திறனாளி என்று கூறலாம் .

ஆனால் உடல் உறுப்புகள் யாவும் சரியாக இருந்தும்

சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதவர்களை எப்படி

அழைப்பது ? உறுப்பு இருந்தும் பயன்படுத்திக்

கொள்ளதவரைப் பொறுத்த மட்டில் அவர் அந்த உறுப்பு

இல்லாத ஊனமே ஆவார். மனஊனத்தை மறைப்பதற்காக

அவர் பெரும்பாலும் தீய செயல்களில் மறைமுகமாக

ஈடுபடுவார் . இவர்களை எதிர்மறை (negative ) மாற்றுத்

திறனாளிகள் எனலாம் . சமுதாயத்தில் இன்றைக்கு இந்த

எதிர்மறை மாற்றுத் திறனாளிகள் பல்கிப் பெருகி

வருகின்றார்கள் . கை கால்கள் நன்றாக இருந்தும்

உழைக்க மறுத்து பிறர் உடைமைகளை அபகரித்துக்

கொள்பவர்கள் , மூளை இருந்தும் பாடத்தைப் படித்துப்

புரிந்து கொண்டு தேர்வு எழுதாமல் , காப்பி அடித்து

எழுதுகின்ற மாணவர்கள் ,வாக்குறுதிகளால் மக்களை

ஏமாற்றி பொதுப் பணத்தையும் ,சொத்தையும் கொள்ளை

அடிக்கின்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள்

இவர்களை எதிர்மறை மாற்றுத் திறனாளிகள்

என்று அழைக்காமல் எப்படி அழைப்பது ?



வீட்டிற்கும் நாட்டிற்கும் இவர்காளால் அவப்பெயர்

.இவர்கள் எல்லோரும்

தங்களின் அக ஊனத்தை அறியாதவர்களே ஆவார்.





No comments:

Post a Comment