Monday, July 9, 2012

cartoon

கார்ட்டூன் இரு பாலரும் கலந்த நண்பர்கள் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது ஒரு தோழி " மிகவும் நம்பமுடியாத ஆனால் இயற்கைக்கு முரண்படாத ஒரு செய்தி சொல்வோருக்கு நம்பமுடியாத ஒரு பரிசு காத்திருக்கிறது " என்றாள் தோழன் 1: எனக்கு நேற்றிரவு இறக்கை முளைத்தது.நான் சந்திர மண்டலம் சென்று உலாவிவிட்டு இப்பொழுதான் வந்தேன் தோழன் 2: நான் பறக்கும் தட்டைப் பார்த்தேன்.வேற்றுலகவாசிகளோடு விளையாடிவிட்டு வந்தேன் தோழன் 3: தமிழ்நாட்டில் இனி மின்தடையே இல்லாதது மாதிரி கனவு கண்டேன் . தோழன் 4: அமைச்சர் வழக்கம் போல மக்களிடம் சென்று குறைகளைக் கேட்காமல் ,குற்றம் நடக்குமிடத்திற்கே சென்று கண்காணித்து குற்றவாளிகளை பணிநீக்கம் செய்தார். தோழன் 5: மந்திரி பணம் வாங்காமல் பணி நியமன ஆணை தந்தார் தோழன் 6: அரசு அதிகாரிகள் இலஞ்சம் கேட்கவில்லை. கடமைகளைச் செய்தனர். கடைசித் தோழன் பரிசைப் பெற்றான். ஏன் என்று மற்ற தோழர்கள் கேட்டனர். அதற்கு அந்தத் தோழி கூறினாள் "எண்ணத்தால் நம்ப முடியாவிட்டாலும் மனம் சிலவற்றை நம்புகிறது. மனம் எதையெல்லாம் நம்புகிறதோ அவையெல்லாம் கனவுகளாக மலருகின்றன.ஊழல் இல்லா இந்தியா வை மனம் கூட நம்ப மறுக்கிறது.எந்தச் செய்தி எண்ணத்தாலும்,மனதாலும் நம்ப முடியாததாக இருந்ததோ அவருக்கே பரிசு "என்றாள்

No comments:

Post a Comment