Thursday, July 20, 2017

about the wild animals

சிங்கம் புலி போன்றவை தாம் வேட்டையாடும் விலங்கை இறந்த பிறகே உண்ணும் . அனால் ஹைனா ஓநாய் போன்ற விலங்குகள் தாம் வேட்டையாடிய விலங்கு உயிரோடு இருக்கும் போதே உண்ணத்  தொடங்கும் .
ஹைனா மட்டுமே இரையாகும் விலங்கின் தோலையும் உட்கொள்ளும். எலும்பு ரோமம் இவற்றை மட்டுமே விட்டுவைக்கும்
மீர்காட்டுகள் (Meerkats) கூட்டமாக வேட்டையாடப் போகும் போது ஒரு மீர் காட்டு உயரமான ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு சுற்றுப்புறத்தைக் கண்காணிக்கும் . ஏதும் ஆபத்து தொலைவில் இருப்பதைக் கவனித்து விட்டால் சமிக்கை ஒலி மூலம் முன்னறிவிப்பு செய்யும்
 
புலி சிங்கங்களை நேரடியாக எதிர்க்கக் கூடிய துணிவு மிக்க விலங்குகளுள் ஹைனாவும் ஒன்று . தனித்து இருந்தாலும் தன் இனத்தை கூட்டி அழைத்து கூட்டமாக எதிர்க்கும் . ஹைனா பிற விலங்குகள் வேட்டையாடிய இரையை எளிதாக்கத் தட்டிப் பறிந்து விடும்
 
சிம்பன்சி குரங்குகள் மாமிசமும் உண்ணும். வேட்டையாடப் போகும் போது கூட்டமாக சென்று திட்டமிட்டு சுற்றி வளைத்து இரை விலங்கை எளிதாக மடக்கிப் பிடித்து விடும்  அதை மரம், பாறை போன்றவற்றில் பலமாக மோதி உயிரிழக்கச் செய்து தின்னும் .மனிதர்களைப் போல தன் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து உண்ணும்.

சிம்பன்சி குரங்குகளின் DNA  98 சதவீதம் மனிதர்களின்  DNA உடன் ஒத்துப் போகின்றன

No comments:

Post a Comment