Wednesday, July 12, 2017

Tharkkappu

தற்காப்பு
ஆபத்து வரும் போது மனிதர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள பல செயற்கை வழி முறைகளை மேற்கொள்ளுகின்றார்கள். ஒளிந்து கொள்ளுதல், பொய்யான காரணம் சொல்லித் தப்பித்தல், நவீன சாதனங்களின் உதவியால் விரைந்து விலகிப் போதல், ஆயுதங்களைக் காட்டி பயமுறுத்துதல்  போன்றவை பெரும்பாலான மனிதர்களுக்குத் தற்காப்பு வழி முறையாக இருக்கின்றது. ஒரு சில மனிதர்களே ஆபத்துக்களை வீரமாகச் சந்தித்துப் போராடுகிறார்கள்
மனிதர்கள் இரவில் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே பாதுகாப்பாக இருக்கின்றார்கள். தினம் தினம் உணவு குடி நீர் தேடி அங்கும்மிங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. கடுங் குளிரையும், கோடையின் தாக்கத்தையும்  வெப்ப மற்றும் குளிர் சாதனங்களைக் கொண்டு தவிர்த்துக்கொள்கின்றார்கள்.  கட்டுப்பாடான சமுதாயத்தில் வாழ்வதால் ஒரு விதமான பாதுகாப்பு அமைப்பு ரீதியாகக் கிடைத்து விடுகின்றது.  ஆனால் காட்டில் வாழும் விலங்குகளின் உயிர் வாழ்க்கைக்கு உத்திரவாதம்  தரக்கூடிய உறுதிமொழி ஏதும் இல்லை. அவைகள் பெரும்பாலும் பாதுகாப்பை விட தற்காப்பையே அதிகம் நம்பி வாழ்கின்றன. 
இறைவன் படைப்பில் எல்லா உயிரினங்களும் சமம் . திறந்த வெளியில் வாழ வேண்டி இருப்பதால் விலங்குகள் தங்களைத் தாங்களே  தற்காத்துக் கொண்டு பாதுகாப்பாக நிலைத்து வாழ ஒவ்வொன்றிற்கும் உடலின் கட்டமைப்பில் தற்காப்புக்குத் தேவையான ஒரு சிறப்பு உறுப்பை படைக்கும் போதே கொடுத்து விடுகின்றான். அதனால் அவைகள் எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றன அல்லது தவிர்த்துக் கொள்கின்றன.
காட்டில் கூட்டம் கூட்டமாய் வாழும் காட்டெருமைகள் . காட்டு மாடுகள் எல்லாம் கூட்டமாய் ஒன்றுகூடி இருப்பதையே முதன்மைப் பாதுகாப்பாகக் கொண்டுள்ளன. யானைகள், ஹைனாக்கள், மீர் காட், காட்டு நாய்கள்   போன்றவை  கூட்டமாய் வாழ்வதையே பாதுகாப்பாகக் கொண்டுள்ளன.  வலியோரைத் தனித்துப் போராடி வெற்றி பெற முடியாத சூழல்களில் கூட்டு முயற்சியே வெற்றி தரும்  என்ற மந்திரத்தை உலகோர்க்கு முதன் முதலில் சொன்னது இந்த காட்டு விலங்குகள்தாம் .கூட்டமாய் இருக்கும் போது தனக்குப் பின் பலர் தோள் கொடுக்க தன் அருகில் இருக்கின்றார்கள்  என்ற துணிச்சலில்  மாடுகளுக்கு வீரம் அதிகம் சுரக்கும். சிக்கத்தைக் கூட துணிந்து எதிர்க்கும். மாடுகளுக்கும், மான்களுக்கும்  அவற்றின் கொம்புகளே ஆயுதம்..
வரிக்குதிரை  ஒட்டகச்சிவிங்கி போன்றவை முரட்டுத் தனமாக உதைக்கும்  உதையில் வேட்டை விலங்குகளின் எலும்பு நொறுக்கிப் போய் விடும். சிங்கம், புலி போன்ற வலிமையான காட்டு விலங்குகளுக்கு தொடர்ந்து வேட்டையாடவும் தற்காத்துக் கொள்ள விரைந்து ஓடவும் உடல் தகுதி மிகவும் அவசியம். அதனால் எந்த காட்டு மிருகமும் தேவையில்லாமல் காயம்பட்டுக் கொள்வதை விரும்புவதில்லை  
ஒட்டகச் சிவிங்கி உயரமாக இருப்பதால் வேட்டை விலங்குகளின் நடமாட்டத்தை தொலைவிலிருந்தே தெரிந்து கொண்டு விடும்
சிறுத்தை  போன்ற புலிகள் எளிதாக மரம் ஏறி சிங்கம் மற்றும் ஹைனா என்ற கழுதைப் புலி போன்ற விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்கின்றது . சிங்கங்களும் மரம் ஏறும் என்றாலும் உடல் பருமனாக இருப்பதால் புலிகளைப் போல அதிக உயரம்  ஏற முடிவதில்லை .பாம்புகளுக்கு விஷமும் விரைந்து செயல் படும் தன்மையும்  அவற்றின் தற்காப்புக்குக் கைகொடுக்கின்றன..யானைகளுக்கு உடல் வலிமையையும் தும்பிக்கையும், காண்டா மிருகத்திற்கு தடித்த தோல் கவசமும் கொம்பும் . சில விலங்குகள் விரைந்து ஓடுதல் செயல்படுதல் போன்றவற்றால் ஆபத்துக்களைத் தவிர்த்துக் கொள்கின்றன சில ஏமாற்று விதைகளைக் கையாளுகின்றன. பல்லிகள் தன் எதிரியை ஏமாற்ற தன்  வாலின் நுனிப் பகுதியை தானே வெட்டி துடிதுடித்துக் கொண்டு விழுமாறு தள்ளி விடுகின்றது.

இதனால் எதிரில் கவனம் திசை மாறிப் போவதால் அச்சமயத்தில் பல்லி தப்பித்து ஓடிவிடுகிறது . எதிரிகள் விலகிச் செல்லும் வரை சில பாம்புகள் செத்தது போல நடித்து தப்பிப் பிழைக்கும். துப்பும் ஒரு வகைப் பாம்பு தன் விஷத்தை எதிரியின் மீது துப்பி தப்பிக்கும்.
பாலை வனத்தில் ஒரு வகையான  பல்லி அருகில் வந்து விட்ட பாம்பிடமிருந்து தப்பிக்க தன்னைத் தானே மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளும் தேனீ, தேள் போன்றவைகளுக்கு விஷம் நிறைந்து கொடுக்கு தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது .
சில வகைச் சிலந்திப் பூச்சிகள் தன் பின் பகுதியில் உள்ள அடர்த்தியான நுண்ணிய ரோமங்களை கால்களால் தீண்டி உதிர்த்து எதிராளியின் முத்தத்தில் வீசும்
. இதனால் கலங்கிப் போகும் எதிராளியிடமிருந்து தப்பிக்கின்றது..ஒரு வகையான சிறு பூச்சி இனம் தன்னைப் பிடித்து சாப்பிட நினைக்கும் ஓணானிடமிருந்து தப்பிக்க  தன் உடலை ஒரு சிறு பpந்து போல சுருட்டி வைத்துக் கொண்டு  சாய்வான நிலப்பகுதியில் விரைவாக உருண்டோடிவிடும். முள்ளம் பன்றி தன் உடலிலுள்ள முட்களையே தற்காப்புக் கவசமாக கொண்டு நடமாடுகின்றது. ஆமைகள்  நொறுக்க முடியாத தன் மேலோட்டை தற்காப்புக் கவசமாக கொண்டு வாழ்கின்றது. ஆபத்து வரும் போது ஆமைகள் இந்த ஓட்டுக்குள்  உட்புகுந்து கொண்டு விடும் .
வெடிப்பு பூச்சி ( bombarder beetle) மட்டுமே உலகில் இருக்கும் பூச்சி இனங்களில்  வெடி வெடித்து தப்பிக்கும் பூச்சியாக இருக்கின்றது. ஆபத்து வரும் சமயங்களில் இது தன் உடலின் பின் பகுதியில் உள்ள ஒரு பையில் இரு வேறு வேதி பொருட்களை கலந்து  வெடிக்கச் செய்கின்றது. வெளிப்படும் வெப்பமிக்க புகையை  ஒரு சிறு துவாரத்தின் வழியாக எதிரிகளை நோக்கி பீச்சுகின்றது. அதன் நாற்றம் மற்றும் தாக்கத்தினால் எதிரிநிலை குலைந்து போகும் சமயத்தில் தப்பித்து விடுகின்றது
மின்சார ஈல் (eel) தன்னைத் தாக்க வரும் எதிகளுக்கு மின் அதிர்ச்சி கொடுத்து நிலை குலையச் செய்து தப்பிக்கின்றது. இந்த மின் அதிர்ச்சியால் சில விலங்குகள் இறந்து போவதும் உண்டு முண்டக் கண்ணுடைய ஒரு வகையான கடல் வாழ் உயிரினம் ( lobster ) உருவத்தில் சிறியதாக இருந்தாலும்  உருவத்தால் சிறியதாக இருந்தாலும் தன்னைத் தாக்க வரும் உருவத்தால் மிகவும் பெரிய ஆக்டோபஸ் போன்ற எதிரிகளைத் துணிந்து  தாக்குகின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் காலால் பலமாக உதைத்து நிலை குலையச் செய்து தப்பிக்கின்றது கடலில் வாழும் சிறிய வகை மீன்கள், சிட்டுக் குருவி போன்ற ஒரு வகைப்  பறவை  கூட்டமாக ஒன்று சேர்ந்து இயங்கி தங்களை ஒரு பெரிய உருவங் கொண்ட விலங்கினம் போலக் காட்டி எதிரியை குழப்பிவிடும்
இதை பார்த்த எதிரிகள் பெரும்பாலும் ஏமாந்து போகின்றன அல்லது தாக்குவதற்குத் தடுமாறுகின்றன. கணவாய் மீன் (cuttlefish), ஆக்டோபஸ், பச்சோந்தி போன்றவை சூழ்நிலைக்கு ஏற்ப தன் உடலின் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன ஆக்டோபஸ் நிறத்தை மட்டுமின்றி உடலின் வடிவத்தையும் பல விதமாக மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது .  நெருப்புக்கு கோழி  பறக்க முடிய விட்டாலும் விரைந்து ஓடக் கூடியது. வலிமையான தன்கால்களால் உதைத்து  நரி போன்ற உயிரினங்களின் உயிரைப் பறித்து விடும்

தன்னை இரையாக்கிக் கொள்ள விரட்டி வரும் புலி சிங்கம் போன்ற விலங்குகளிடமிருந்து தப்பிக்க மான்கள் வேகமாக  ஓடும்  மான்களுக்குத் தெரியாமல் புலியால் அவைகளுக்கு நெருக்கமாக வரமுடிந்தால்  மட்டுமே  மானை வெற்றிகரமாக வேட்டை ஆடமுடியும். சற்று பிசகிப் போனாலும் மான் தப்பித்து விடும். அதற்குக் காரணம் புலி, சிங்கம் இவற்றால் 30 வினாடிகள் மட்டுமே அதிக வேகத்தில் ஓட முடியும். அதற்குப் பிறகும் ஓடினால் இரத்தஅழுத்தம்  அதிகரித்து அது இறந்து விடக் கூடும்  என்பதால் அது தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு தோல்வியை ஒப்புக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டு விடுகின்றது. மான்கள் கூடுதல் நேரம் தொடர்ந்து வேகமாக ஓடக்  கூடியவை என்பதால்  எளிதாக தப்பித்து விடுகின்றன

No comments:

Post a Comment