Thursday, April 11, 2024

இயற்கையைப் பார்த்தும் தொடரும் புரிதலின்மை

 இயற்கையைப் பார்த்தும்  தொடரும் புரிதலின்மை

 கடலிலிருந்து நீர் ஆவியாகி  நாட்டு மக்களின் நலனுக்காக வானத்தில் மேகமாகி  எங்கு பண்டமாற்றம் பெறுமோ அங்கு விரைந்து சென்று ,மலை முகட்டில் முட்டி மோதி குளிர்ந்து மழையாகப் பொழிகின்றது . அது மலையிலே தங்கிவிடுவதில்லை.மலைக்கு இரக்கமுள்ள மனசு . பள்ளத்தாக்குகள் கொஞ்சம் நீரைத் தேக்கிவைத்துக்கொள்கின்றது . அதனால் குறிஞ்சி நிலப் பயிர்களும் ,பிற உயிரினங்களும் காலம் முழுதும் வாழ்கின்றன . மீதி நீரை  மலைச் சரிவில் ஓடவிட்டு மக்கள் வாழும் நிலப்பகுதியை அடையுமாறு செய்கின்றது. அதனால் நெய்தல் ,முல்லை நிலத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் கவலையின்றி வாழ்கின்றன. மக்கள் பயன்பாட்டிற்கும் எஞ்சிய நீரே மீண்டும் கடலில் போய் கலக்கின்றது . நீரின் இந்த வட்டச் சுற்று முறையில்  இயற்கையால் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. கடல் நீர் என்பது மக்களிடம் உள்ள பணம் . வரி என்பது அதன் ஆவியாக்கம் . மலை என்பது ஆட்சியாளர்கள் . மக்களின் பணம் ஆட்சியாளர்களை அடைந்ததும் அவர்களுடைய கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு என்ற இரக்க குணத்தால் அவர்களுடைய மடியிலேயே தங்கிவிடாமல் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக வடிந்து செல்லவேண்டும் . மலை நீர் என்பது மலைவாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்ல  அதில் நெய்தல் முல்லை நிலங்களில் வாழும் உயிரினங்களுக்கும் கூடுதல் பங்குண்டு  . மலை என்பது மக்களுக்காக சேவை செய்யும் ஒரு இடைஊடகம் மட்டுமே. அதுவே மழை நீரை விழுங்குவதில் லை

No comments:

Post a Comment