Wednesday, January 26, 2011

arika iyarppiyal

கோடை கால ஒலி





ஊடகத்தின் அடர்த்தி,வெப்பநிலை,ஈரப்பதம் இவற்றைப்
பொருத்து ஒலியின் திசை வேகம் உள்ளது. இது
ஊடகத்தின் சார்பிலா வெப்பநிலையின் வர்க்க மூலத்திற்கு
நேர் விகிதத்திலும் அடர்த்தியின் வர்க்க மூலத்திற்கு
எதிர் விகிதத்திலும் மாற்றத்திற்கு உள்ளாகின்றது .ஈரப்பதம்
அதிகரிக்க திசை வேகமும் அதிகரிக்கின்றது .நீரின்
பரப்பிற்கு சற்று மேலாக குறிப்பாக கோடை காலத்தில்
ஒலி விரைந்து கடந்து செல்வதேன் ?
                                                      ***************

குளிச்சியான வறண்ட காற்றைவிட ,சூடான வறண்ட
காற்றில் ஒலி விரைவாகச் செல்கிறது . சூடான காற்றில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி வேகம் அதிகம் என்பதால் ,அவை ஒன்றோடொன்று நெருங்கி வரும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றன .அதனால் இறுக்க நெருக்கமும் தளர்ச்சி
விலக்கமும்  விரைந்து பரவிச் செல்கின்றன . கோடையில்
நீரின் வெப்பநி லையை விடக் காற்றின் வெப்பநிலை
அதிகமாக இருக்கும் போது வெப்பநிலை எதிர் மாறு நிலை  தோன்றுகிறது . அதாவது நீரின் பரப்பிற்கு மேலாக உயரம் செல்லச் செல்ல வெப்ப நிலை குறைகிறது .இந்த எதிர் மாறு வெப்ப
 நிலை, மேல் நோக்கிச் செல்லும் ஒலியை நீர் பரப்பை நோக்கி எதிரொலிக்கின்றன. அமைதியான நீர் பரப்பு ஒலியை
மேல் நோக்கி எதிரொலிக்க ,ஒலியின் பெரும் பகுதியை நீர் பரப்பை
ஒட்டிய மெல்லிய காற்றுப் படலத்தில் நெடுந் தொலைவு கடந்து
செல்கிறது .நெடுந் தொலைவில் கேட்கப்படும் ஒலியின் செறிவு ,அதிர்வெண் ,தொடக்கத்தில் ஒலியின் செறிவு ,எதிர்மாறு வெப்பநிலையின் எதிரொளிப்புக் குணகம் போன்றவற்றைப்
பொறுத்தது.




No comments:

Post a Comment