Saturday, November 2, 2013

cartoon

கார்ட்டூன்
அண்டை நாட்டில் அடுத்த மாதம் நடக்கும் மகாநாட்டில் நம் தலைவர் கலந்து கொள்ளக் கூடாது 
தலைவர் இன்னும் முடிவு எடுக்கவில்லை 

மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து அடுத்த வாரம் நடக்கும் அந்த மகாநாட்டில் பங்கேற்கக் கூடாது 
இது பற்றி சரியான நேரத்தில் சரியாக நம் தலைவர் முடிவுவெடுப்பார்.

நாளை மறுநாள் நடக்கும் மகாநாட்டிற்க்கு நம் தலைவர் போகக் கூடாது  
தலைவர் கலந்து கொள்ளமாட்டார். துணைத் தலைவர் கலந்து கொள்வார்
ஓட்டு மொத்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மகாநாட்டில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது.
மகாநாட்டில் கலந்து கொண்டால் தான் நம்முடைய மனக் குறைகளைப் பற்றி அங்கே பேசமுடியும்.அதனால் தலைவர் கலந்து கொள்வார்.

கலந்து கொண்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்
நாளை நடக்கும் மகாநாட்டில் தலைவர் கலந்து கொள்ள மாட்டார். வதந்திகளை நம்பவேண்டாம்.
உறுதியான எண்ணமும்,கொள்கையும் நோக்கமும் இல்லாதவர்களால் மட்டுமே இப்படி நடந்து கொள்ள முடியும். இவர்கள் சரியான முடிவு எடுப்பதற்கு முன்னர் மகாநாடே முடிந்து விடப் போகின்றது.

காலதாமதம் ஒரு ராஜதந்திரம் என்று இவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.மக்களுக்காக ஒரு வேடம்,மாற்றானுக்காக ஒரு வேடம் என்றால் அவன் நிச்சியமாக ஒரு போலியாகத் தான் இருப்பான். நீ நீயாக இரு-எந்தத் துறையில் இருந்தாலும்.

No comments:

Post a Comment