Friday, September 3, 2021

 காலந்தாழ்த்துதல் என்பது ஒரு வகை அகத்தடையாகும் . செயலைச்  செய்து முடிக்க  உண்மையான விருப்பம் இல்லாமையே காலந்தாழ்த்துதலை த் தூண்டிவிடுகிறது .செம்மையாகச் செய்து முடிக்கச்  சரியான திறமையின்மை  . சோம்பேறித்தனத்தால் செயலில் ஆர்வமின்மை,பிற விருப்பச் செயல்களில் கொண்டுள்ள ஆர்வத்தின் குறுக்கீடு , பிறர் செய்து தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு .பிறருக்குக்  கூடுதல் அனுகூலம் கிடைத்துவிடக் கூடாது என்பதில் கவனம் போன்றவற்றால் காலந்தாழ்த்துதல் தூண்டப்படுகிறது .

 

எந்த வேலையையும் நாளை நாளை என்று தள்ளிப்போடக்கூடாது .அப்படிச் செய்யும் போது அந்த வேலை செய்யப்படாமலேயே போய்விடலாம்  பயனுறுதிறனில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பது உறுதியாகத் தெரியுமானால்   காலந்தாழ்த்துதலை ஒரு குறுக்கியகாலம்  மேற்கொள்ளலாம். அக்குறுகிய காலத்தில்  பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்ந்து அவற்றை நீக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் காலந்தாழ்த்துதலைப்போல  அவசரம் காட்டுதலும் ஒரு வகை அகத்தடையே ஆகும்..பெரும்பாலான சூழ்நிலைகளில் அவசரம்  ஒரு செயலை விரைந்து முடிப்பதைக் காட்டிலும் .பாழ்படுத்திவிடுவதுடன் , புதிய சிக்கல்களையும்  ஏற்படுத்திவிடுகின்றது ..தெளிவான சிந்தனையுடன்  செயலை முன்திட்டமிட்டுத் தொடரும் போது   அவசரமோ அல்லது காலந்தாழ் த்துதலோ ஏற்படுவதில்லை .இது உண்மையில் ஒருவருடைய நுண்ணறிவை சார்ந்து இருக்கின்றது .செய்யவேண்டிய வேலையை எப்போது எப்படிச் செய்யவேண்டும்,, எதை முதலில் செய்து எதைப் பின்னர் செய்யவேண்டும் , இடைத்தடைகள் இருக்குமானால் அதை எப்படி எதிர்கொள்வது , கிடைக்கும் காலத்திற்குள் செய்து முடிக்க என்ன செய்வது போன்ற வற்றைத் தீர்மானிக்க முடிகின்றது                    .               

No comments:

Post a Comment