Saturday, September 4, 2021

 நம்முடைய செயல்கள் எல்லோருக்கும் பயனளிக்கும் போது வரவேற்கப்படுகின்றது மக்களிடம் எதிர்ப்பு சிறிதும் இருப்பதில்லை ஆனால் .சிலருக்கு மட்டும் பயன் தரும் போது மற்றவர்கள் எதிர்க்கிறார்கள்.நன்மை -தீமை பெறுவோரின் சதவீதத்திற்கு ஏற்ப எதிர்ப்பு இருக்கும். நம்முடைய செயல்பாடுகள் தங்குதடையின்றி செய்யப்படுவதற்கு நம்முடைய செயலின் பயனுறு திறனை மதிப்பீடு செய்வது அவசியம். அதற்கு  சமுதாயத்தில் இணைந்திருக்கும் போது எப்போதும் இயல்பாக சிந்திக்கும் மனப் பக்குவத்தையும்   , இயல்பாக வாழும் விருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும்     அது சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கும்  செயல்படுவதற்கும்  சம உரிமையை வழங்குகின்றது செயல்பாடுகளில் எது எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது ,எது பிறருக்குத் தீமை செய்யக்கூடியது, எதைத் தேர்வு செய்து செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது போன்ற சிந்தனைகளைத் தந்து வழிகாட்டுகின்றது மறைவொழுக்கத்தினால் ஏற்படும் மனவழுத்தத்தை ஒழித்துக்கட்டிவிடுகின்றது .                         .               

No comments:

Post a Comment