Tuesday, January 17, 2023

 

நாட்டை ஆளாவிட்டாலும் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டை ஆளும் வாய்ப்பைப் பெறு கின்றார்கள் .வீட்டை ஆளும் போது  ஏற்படும் பிரச்சனைகளே நாட்டை ஆளும் போதும்  ஏற்படுகின்றன அளவில் காணப்படும்  வேறுபாடு அதற்கான தீர்வுகளை வேறுபடுத்துவ தில்லை  

நாட்டின் பிரச்சனைக்களுக்கான தீர்வுகள் வீட்டைக் கட்டி ஆளும் ஒவ்வொரு குடிமகனின் எண்ணங்களிலும் இருக்கவே செய்கின்றன நாட்டை ஆளாவிட்டாலும் வீட்டை ஆளும் ஒவ்வொருவருக்கும் தெரியும் ஒரு குடும்பத்தின் இனிமை எப்படி சீர் கெட்டுப் போகின்றதோ ஏறக்குறைய அதே வழியில் தான் -நாட்டின் இனிமையும் சீர்கெட்டுப் போகின்றது என்று இதைச் சரியாகப்புரிந்து கொண்டவர்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தால் /இருப்பதால் வீட்டிலும் சரி நாட்டிலும் சரி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிவதில்லை  .புரிந்து கொள்ளாதவர்கள்  அது இறைவனால் விதிக்கப்பட  விதி என்றும் , மனிதர்களின் மதியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அக்கறை கொள்வதில்லை . புரிந்து கொண்டவர் களும் ,புரியாமல் வாழ்பவர்களும் மக்களில் பெரும்பான்மையினர்..புரிந்தும் புரியாதது போல நடிப்பவர்கள்  மக்களில் சிறுபான்மையினர்தான் இவர்களே வீட்டிலும் சரி நாட்டிலும் சரி இனிமை மேலும் சீர்கெட்டுப் போக காரணமாக இருக்கின்றார்கள். இனிமை சீர்கெடக் காரணமாக இருப்பவர்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தால் அதன் பாதிப்பை அதிகாரமுள்ளவர்களால் சரி செய்யமுடிகிறது அவர்கள் அதிகாரமுள்ளவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு நியாயத்தை அறிவுறுத்தி நேர் படுத்தலாம் . பொதுவாக அதிகாரம் அறிவுரையை விரும்புவதில்லை .அதிகாரமுள்ளவர்கள் நல்ல சிந்தனையாளர்களாகவும்  கல்வியாளர்களாகவும் இருக்கும் போதுதான் அவர்களுக்கு  புரிந்து கொள்ளும் தன்மை  இருக்கும். அறிவுரையின் நியாயத்தையும் புரிந்து கொள்வார்கள் . பொதுவாக அளவில்லாத ,கட்டுப்படுத்த முடியாத அதிகாரம் சுய முடிவைத்தவிர பிறரின் அறிவுரையை ஏற்றுக்கொள்வதில்லை     .     

No comments:

Post a Comment