Sunday, January 22, 2023

 

இந்தியா ஏன் இன்னும் வல்லரசு நாடாக வளரவில்லை ?

அங்கே மக்கள் திறமையானவர்கள் இல்லையா ? இருக்கின்றார்கள் .வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டே வாழ்க்கையை முடித்துக்கொண்டு விடுகின்றார்கள்.

அங்கே நேர்மையானவர்கள் இல்லையா ? இருக்கின்றார்கள் . நேர்மை அவர்களுடனேயே உடன்கட்டை ஏறிவிடுகின்றது  

அங்கே ஆள்வதற்குத் தகுதியான ஆட்கள் இல்லையா ? இருக்கின்றார்கள் மக்களின் ஆதரவின்றி .

அங்கே  அரசியல்வாதிகள் இருக்கின்றார்களா ? இருக்கின்றார்கள் அரசியல் பற்றிய அறிவு சிறிதும் இல்லமால். இவர்களால் தான்  இந்தியா மேலும் மேலும் மோசமடைந்து வருகின்றது.இவர்கள் சுயநலக்காரர்களாக இருக்கின்றார்கள் , மக்கள் நலத்தைக் கருத்திற்கொண்டு சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை, பேராசைக்காரர்களாக இருக்கின்றார்கள் .எதிர்கட்சியினரையும் எதிர்ப்போரையும் அழித்துவிட்டு நீண்ட நாட்களுக்கு ஆட்சியில் அனுபவித்துத்தான் இவர்களது நோக்கம். தகுதியில்லாததால் நாட்டை ஆள விரும்பும் எவருமே தங்கள் தகுதியை முன்கூட்டியே காட்டுவதில்லை .அவர்கள் எல்லோரும் ஆள்பவர்களின் தவறுகளையும் குற்றங்களையும் குறைகூறுவதே தங்களின் தகுதி என்று நினைக்கின்றார்கள்

No comments:

Post a Comment