Tuesday, January 10, 2023

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

நாட்டின் முன்னேற்றம் பல அகத்தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது . இந்த அகத்தடைகளை அகற்றாமல் புறத்தடைகளைக் குறையளப்பதால்  சுதந்திரம் பெற்று ஆயிரம் ஆண்டுகள் கடந்து போனாலும் உண்மையான முன்னேற்றம் காணாத தூரம் தான் .நாட்டின் முதல் அகத்தடை ,வறுமையோ, எழுத்தறிவின்மையோ ,திறமையின்மையோ இல்லை. நாட்டைச் சரியாக நிர்வகிக்கத் தெரியாத அரசியல் வாதிகளே  இன்றைக்கு நேர்படுத்த முடியாத அகத்தடைகளாக இருக்கின்றார்கள் அவர்கள் நாட்டின் வளத்தை தனதுடைமையாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஒருவருக்கொருவர் ஏசிப் பேசிக்கொள்கின்றார்களே ஒழிய உண்மையில் நாட்டு மக்களின் நலத்திற்காக இல்லை . அவர்களாகத் திருத்தவும் மாட்டார்கள். மக்களுக்கான காவல் மற்றும் நீதித் துறைகளுக்கும் கட்டுப் பட மாட்டார்கள் . இதற்கான மாற்றத்தை இனி வரும் எக்காலத்திலும் ஆட்சியாளர்கள் செய்யமாட்டார்கள் . மக்கள் தான் செய்யமுடியும் அவர்களுள் ஒரேயொரு உண்மையான நல்லவன் ,நேர்மையானவன் இருந்தால் .      

No comments:

Post a Comment