Wednesday, December 6, 2023

அரசாணைக் கால் கட்டுதல்

 அரசாணைக் கால் கட்டுதல்

 அரசன் ஆணைக் கால் என்பதே மருவி அரசாணைக்கால் என்று பொதுவழக்கில் நிலை பெற்றிருக்கின்றது .அரசன் நேரில் வந்து அனுமதி வழங்க இயலாது என்பதால் அரசாணைக் காலையே அரசன் அளிக்கும் ஆணையாகக் கொண்டு திருமணத்தை நடத்தும் பழக்கம் நகரத்தார்களிடம் மட்டுமே உண்டு . அரசாணைக் கால் கட்டுவதற்குத் தேவையான ஓரளவு நீண்ட மூக்கில் கம்பு, கிளுவைக்கம்பு, பாலைக் கம்பு ,அரசஇலை மற்றும் மாவிலைக் கொப்பு ,அவற்றை வைத்துக் கட்டுவதற்குத்  தேவைப்படும்   உறுதியான சணல் கயிறு நூல்கண்டு போன்றவற்றையும், மாவிலை தோரணம் கட்டுவதற்குத் தேவையான ஓலைக் குருத்துக் களையும்   முன்கூட்டியே ஆர்டர் செய்து திருமணநாளுக்கு முதல்நாள் காலையில் கிடைக்கும் படி வாங்கி வைத்திருக்க வேண்டும் . திருமணத்தன்று வீட்டு வாசலில் குலையுடன் கூடிய வாழைமரம் கட்டவேண்டும் .இதையெல்லாம் செய்து கொடுக்க ஊரில் சில ஆட்கள் இருக்கின்றார்கள்.நுழைவு வாயிலில் கட்ட வேண்டிய  பூமாலை மற்றும் காலஞ்சென்ற முன்னோர்களின் படங்களுக்குச் சாத்த வேண்டிய மாலைகளுக்கு பூக்காரர்களிடமே ஆடர் கொடுக்கலாம்.   

 

திருமண வீட்டிற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மனைக்கு அருகில் வீட்டுப் பெண்கள்  சங்கு ஊத பங்காளிவீட்டு ஆண்கள்  அரசாணி மேடையில் உள்ள குழியில் கொஞ்சம் பால்விட்டு , அதில் ஒரு பவளத்தை காகிதத்தில் வைத்து மடித்து போடுவார்கள்.அதன் பின் மூக்கில் கம்பின் ஒரு முனையை அக் குழியில் வைத்து செங்குத்தாக நிற்குமாறு செய்து கொள்வார்கள் அதனுடன் கிளுவை மற்றும் பாலைக் குச்சிகளை இணைத்துக் கட்டுவார்கள். மூக்கில் கம்பு சாய்த்துவிடாமல் இருக்க அதன் மேல் முனையை உத்திரம் அல்லது ஒரு நிலையான அமைப்புடன் இணைத்துக் கட்டுவார்கள். குச்சிகள் தெரியால் இருக்க அவற்றைச் சுற்றி மாவிலை களையும்  அரச இலைகளையும்  வைத்துக் கட்டுவார்கள் .உள்ளூர் திருமணமாக இருந்தால் அரசாணைக் கால் கட்டுதல் அவரவர் பங்காளிகளைக் கொண்டு இருவீட்டிலும் நிகழும். வெளியூர் திருமணமாக  இருந்தால் பெண்வீட்டில் மட்டுமே நிகழும்.  பகவணம் செய்யும் பொது புரோகிதரால் அரசாணிக் காலுக்கு மரியாதை செய்யப்படும்  திருமணம் முடிந்ததும் அரசாணைக்காலுக்குப் பொங்கல் வைப்பார்கள் .பெண்ணழைப்பு முடிந்த பின்னரே அரசாணைக் காலைப் பிரிக்கவேண்டும்.

 

No comments:

Post a Comment