Wednesday, March 9, 2011

Eluthatha Kaditham-22

எழுதாத கடிதம்


அன்பார்ந்த அரசியல்வாதிகளே,

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்திய குடிமக்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு தலையாய பணி இருந்தது.
தங்களுடைய குடும்பம், வேலை இவற்றையெல்லாம்
விட்டுவிட்டு அந்தப்பணியில் ஈடுபட்டார்கள் . தங்கள்
நாட்டைச் சுரண்டும் .ஆங்கிலேயர்களை விரட்டப்
போராடினார்கள். நாட்டை விட்டு விரட்டிவிட்ட
பின்னர்தான் ஓய்ந்தார்கள்.

ஆனால் இந்தியா இன்றைக்கும் தான் சுரண்டப்பட்டு
வருகிறது.இப்போது ஆங்கிலேயர்களால் இல்லை.
இந்தியா இந்தியர்களாலேயே சுரண்டப்பட்டு வருகிறது.
மிகுந்து வரும் அரசியல்வாதிகளால்
சுரண்டப்படும் வீதம் அதிகரித்து 50 விழுக்காட்டுக்கும்
மேல் வளர்ந்துள்ளது..இது மேலும் அதிகரிக்கக்கூடிய
வாய்ப்புகளே நம் நாட்டில் நிலவுகிறது தம் நாட்டு மக்களே
தாய்நாட்டைச் சுரண்டுவதை கண்டும் காணாதவர்களாய்
இன்றைக்கு மக்கள் மாறிபோய் இருக்கிறார்கள்.
போராடிப் பெற்ற சுதந்திரத்திற்குப் பின் நம்முடைய
வாழ்க்கைத் தரம் முன்னேறும் என்று நம்பிக்
கொண்டிருந்தவர்களுக்கு தன வீட்டைத்தானே
சுரண்டுபவர்களைக் கண்டு நம்பிக்கை இழந்தார்கள்.
வேலை இல்லாத் திண்டாட்டம், பிள்ளைகளுக்கு
குறைந்த பட்ச கல்வி கொடுக்க முடியாமை , .
விலைவாசி உயர்வு , சுகாதார வசதிகள் இன்மை ,
அதிகாரிகளின் அலட்சியப் போக்கு,ஊழல் , எதாவது
ஒரு முறையில் ஏமாற்றப்படுதல், தன தனித் திறமையை வெளிப்படுத்திக்காட்டிவாழும் வாய்ப்பில்லாமை
போன்றவற்றால் திண்டாடும் அவர்கள் அதைத்தவிர்த்து
பிற விசயங்களைப் பற்றி சிந்திக்கவோ அல்லது
செயல்படவோ முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள்

அன்பார்ந்த அரசியல் வாதிகளே உங்களைச் சாடுவதோ,
தண்டனைக்கு வலியுறுத்துவதோ,வெறுப்பதோ எங்கள்
நோக்கமில்லை . நடந்தவை எல்லாம் நடந்தவைகளாக
இருக்கட்டும். இனி நடப்பவையாவது நல்லவைகளாக
இருக்கட்டும்.



1. அரசியல்வாதிகளே,உங்கள் செலவுகளை உங்கள்
    ஊதியத்திலிருந்தே செலவு செய்யுங்கள்..அரசு   முறையான                         
    வேலைகளுக்கு அரசு செலவு செய்யட்டும் .ஆனால் அதற்காக
    ஆடம்பரமாக ,அதிகப்படியாக செலவுக்குத் திட்டம் போடாதீர்கள்.

2 .வரி என்பது நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனை    
    மேம்படுத்துவதற்க்காக வசூலிக்கப்படுவது. அதில் அரசு தன   
    செலவினங்களுக்கு (ஊதியம், அரசு முறையான
    செலவினங்கள்) 10 சதவீதம் மட்டுமே ஒதுக்கிக் கொள்ளலாம் .
   90 சதவீதம் நாட்டுக்காகவேசெலவழிக்கப்படவேண்டும.

3. மக்களை வசிகரிக்கும் வெறும் திட்டங்களைத் தீட்டுவது
   மட்டுமே உங்கள் செயல்படில்லை.அதன் தேவையை,
  முன்னுரிமையின் அடிப்படையில் முடிவுசெய்து
   செயல்படுத்தி,அது முற்றுப்பெறும் வரை கண்காணித்து
   நாட்டுக்கு அர்பனியுங்கள். அதில் ஊழல் இல்லாமல்  
   பார்த்துக்கொள்ளுங்கள்.

4 அதிகாரம் மிக்க பதவியில் இருக்கிறோம் என்று
   நினைக்காமல் உங்களை நம்பிய மக்களின் தொண்டனாக
  இருக்கிறோம் என்று மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்
  கொள்ளுங்கள் .



No comments:

Post a Comment