Monday, January 9, 2012

arika ariviyal

இரும்பு ,காந்தம் -இனமறிதல் எங்ஙனம் ?


எல்லா வகையாலும் ஒத்த இரு உலோகத் துண்டுகள் உள்ளன.எடை,
நிறம்,வடிவம்,அளவு எல்லாம் சமம்.ஆனால் அதிலொன்று சாதாரண
இரும்பு,மற்றொன்று காந்தம்.கையில் கருவிகள் ஏதுமில்லை.கருவிகளின்
துணையின்றி அவற்றை இனமறிதல் எங்ஙனம் ?

ஒரு தண்டில் காந்தப் பண்பு அதனிரு முனைகளில் செரிவுற்றுள்ளன.இதையே
நாம் காந்த வட,தென் முனை எனக் குறிப்பிடுகின்றோம்.காந்தத்தின் மையப்
பகுதியில் காந்தத் தன்மை புறத்தே வெளிப்பட்டுத் தெரிவதில்லை.எனவே
மேஜையில் வைக்கப்பட்டுள்ள தண்டின் இரு முனைகளோடு அதன் மையப்
பகுதியையும்,கையிலுள்ள தண்டால் கவரப்பட்டால் ,கையிலுள்ள தண்டு
காந்தமாகும்.அப்படியில்லாது இருமுனைகளை மட்டும் கவருமானால் ,
கையிலுள்ள தண்டு இரும்பாகும்.

No comments:

Post a Comment