Monday, January 23, 2012

arika ariviyal

கதிரியக்கம் -செயற்கையும் ,இயற்கையும்



அணுக்கருக்களில் புரோட்டானும் ,நியூட்ரானும் ஒரு குறிப்பிட்ட விகித
நெடுக்கையில் இருக்கும். இதில் புரோட்டானோ அல்லது நியூட்ரானோ
அந்த விகித நெடுக்கைக்கு அப்பாற்பட்டு அதிகரிக்கும் போது, ஒரு
நிலையற்ற தன்மை தூண்டப்படுகிறது .இதை அணுக்கருவிலுள்ள
நியூட்ரானுக்கும் புரோட்டானுக்கும் உள்ள தகவால் (Ratio ) குறிப்பிடுவார்கள் .
எளிய அணுக்கருக்களில் நியூட்ரானும் புரோட்டானும் சமமாக
இருப்பதால் நிலைப்புத் தன்மைமிக்கனவாக இருக்கின்றன .கனமான
அணுக்கருக்களில் நியூட்ரான்கள் அதிகரிப்பதால் ஒரு நிலையற்ற தன்மை
தூண்டப்படுகிறது.அதனால் அவை கதிரியக்கம் கொண்டுள்ளன . அப்போது
அதிகப்படியான நியூட்ரான்களுள் ஒன்று சிதைந்து எலெக்ட்ரானை
உமிழ்ந்து புரோட்டானாக மாறுகிறது .இது செயற்கை கதிரியக்கமாகும் .
கதிரியக்கத்தை நிலையான அணுக்கருக்களில் புரோட்டானையோ
அல்லது நியூட்ரனையோ உட்புகுத்தி செயற்கையாகப் பெறலாம் .
இயற்கைக் கதிரியக்கத்தில் பாசிட்ரான் (Positron ) வெளிப்படுவதே யில்லை.
செயற்கைக் கதிரியக்கத்தில் பாசிட்ரான் வெளிப்படுவது சாத்தியமானது .
ஏன் இந்த வேறுபாடு ?
நியூட்ரான், புரோட்டானாகவும் ,எலெக்ட்ரானாகவும் சிதைவுறுவது
ஆற்றல் மாறாக் கோட்பாட்டின் படி இயல்பானது.ஏனெனில் நியூட்ரானின்
நிறை ,புரோட்டான்,எலெக்ட்ரான் நிறைகளின் கூடுதலை விட அதிகமானது. .
பாசிட்ரான் உமிழ்வு ,புரோட்டான் நியூட்ரானாக மாறுவதால் ஏற்படுகின்றது .
இது நிகழ புரோட்டானுக்கு கூடுதல் ஆற்றல் தேவை .இது செயற்கைக்
கதிரியக்கத்தில் ,புறத் தாக்கத்தினால் அளிக்கப்படுவதால் ,அதில் மட்டுமே
இயலுவதாக இருக்கிறது .

No comments:

Post a Comment