நான் அறிவியல் படித்து அறிவியலை கற்பித்த ஒரு ஆசிரியன். நான் படித்த அறிவியலில் கடவுள் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை .கடவுள் மக்களால் கற்பிக்கப்படும் உருவமாக இல்லை . பிரபஞ்சம் எங்கும் தேடினாலும் இதுதான் உண்மை . கடவுள் மனிதர்களின் மனதில் தான் இருக்கின்றார். கடவுள் என்பது ஒரு கொள்கை . ஒவ்வொரு மனிதனும் தன் மனதினைத் தானே தூய்மைப்படுத்திக்கொள்ள நம் முன்னோர்களால் நிறுவப்பட்ட அறிவுரை. மாயை போலத் தோன்றினாலும் நிழல்வடிவ நிஜம் நான் கடவுளுக்கு கற்பிக்கப்பட்ட நம்பமுடியாத குணங்களை ஏற்றுக்கொள்வதில்லை . ஆனால் மனதை சத்தமின்றி சுத்தப்படுத்தவும் கடவுள் கொள்கை வேண்டும் என்று விரும்புவேன் . இன்றைக்கு சமுதாய மேடையில் நிகழும் மனம் பொறுக்கமுடியாத நிகழ்வுகளைக் காணும் போது அந்தக் கடவுள் நம் முன்னோர்கள் கற்பித்த மாதிரி உண்மையிலே இருக்கக் கூடாதா என்று நினைப்பேன். . கடவுளே நீ எங்கே இருக்கின்றாய் ? ஒரு முறை அவதரித்து தர்மத்தையும் மனித நீதியையும் அழிந்து போய்விடாமல் காக்கமாட்டாயா? இங்கே மனிதர்கள் ஈகோ வினால் ஒருவரை யொருவர் எதிரியாக நினைத்து மனித நேயத்தையே மறந்து வருகின்றார்கள் . சூரசம்காரம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் உலகப் பெரும் போர் வரலாமா ?
கடவுள் - by Dr M மெய்யப்பன் . e -book from Amazon KDP
No comments:
Post a Comment