Tuesday, April 23, 2024

கிருத்துவர்கள் வந்தபிறகுதான் இந்தியாவில் கல்வி வந்தது என்று ஒரு சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றார்க.ள். இது  முட்டாள்தனமான கருத்து . மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழி இலக்கியங்கள் ,மொழியின் வளத்தைக் காட்டுகின்றது. கல்வியும்  கற்றவர்களும் இல்லாமல் இலக்கியங்கள் மலர்ந்திருக்கமுடியாது. உலகில் தமிழைத் தவிர்த்த எந்த மொழியிலும் இவ்வளவு இலக்கியங்கள் இல்லை. திருக்குறள் , பகவத் கீதை, ,வேதங்கள் போல இன்றைக்கும் பிற மொழிகளில் இல்லை .மொழிபெயர்ப்பு மட்டுமே உண்டு. தவிர மக்களிடம் கைத்தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்று இருந்தது   சிற்பங்கள், மர வேலைப்பாடுகள், மட்பாண்டங்கள் . துணி நெய்தல், இயந்திரங்களின்றி உழவுத் தொழிலில் நுட்பம் ,கட்டடக்கலை,வாழ்வியல் ஒழுக்கங்கள்,மூலிகை மருத்துவம், யோகா உடற்பயிற்சி போன்றவற்றை யெல்லாம் கற்றுக்கொள்ள கிருத்துவர்கள் மட்டுமின்றி ,சீனர்களும் ,அரேபியர்களும் , கூட வந்தார்கள்செழிப்பான வாழ்க்கையைப் பார்த்து இவர்கள் எல்லோரும் இங்கேயே தங்கிவிட்டார்கள். உண்மையில் இவர்கள் வந்து பிறகுதான் சமுதாய ஒழுக்கம் சீர்குலைய ஆரம்பித்தது. புகுந்த வீடு வந்தபிறகும் பிறந்த வீட்டுப் பெருமையை மட்டுமே பேசுகின்றார்கள் 

Tuesday, April 16, 2024

விஸ்வநாதன் வேலை வேண்டும் -எல்லோருக்கும்

 

விஸ்வநாதன் வேலை வேண்டும் -எல்லோருக்கும்

நாட்டில் எல்லோருக்கும் வேலையும் அதற்குரிய சம்பாத்தியமும் இருக்கவேண்டும் . முதலில் திறமையானவர்கள் அப்புறம் படித்தவர்கள் என எல்லோரையும் தேடிப்பிடித்து வேலை கொடுக்கவேண்டும் , அவர்கள் ஆள்பவர்களால் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்றால் அவர்கள் உண்மையில் நாட்டிற்கு கேடு செய்கின்றார்கள்  என்றுதான் அர்த்தம் . எல்லோருக்கும் வேலை என்று இருந்தால் அவர்கள் சம்பாத்தியம் மூலம் நாட்டுக்குத் தொடர்ந்து நிரந்தரமான வருவாய் கிடைக்கும்.  மேலும் நாட்டின் வளர்ச்சியில் ஆள்பவர்களுக்கு மட்டுமின்றி சாதாரண குடிமகனுக்கும் பங்களிப்பு கிடைக்கின்றது. காலங்காலமாய் இதைக்கூட செய்யமுடியாத ஆட்சியால்  சாகாத சமுதாயத்திற்காக வாழும் மக்களுக்கு ஒரு நன்மையையும் விளையப்போவதில்லை

Saturday, April 13, 2024

ஆள்பவர்களின் இலக்கணங்கள்

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாயும் , இன்னும் நம் அரசியல்வாதிகள் தெடர்ந்து அவர்களுக்கு முன்னாள் ஆட்சிபுரிந்தவர்களைக் குறை கூறிக்கொண்டே இருக்கின்றார்கள் . இதன் மூலம் அவர்களுக்கு முன்னால்  ஆட்சி புரிந்தவர்களால் நாட்டுக்கு எந்த உருப்படியான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையே அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தியாவின் தேவை ஒரு நல்ல நேர்மையான தலைவரே. 135 கோடி மக்களில் அப்படி ஒருவர் இல்லாமல் போனது நம் நாட்டின் தூரதிருஷ்டம்  தான் .நல்ல தலைவர் பிறக்காமல்  இல்லை. ஆனால் அவருடைய சுய சிந்தனைகளை கலைத்து விடுகின்றார்கள் . அதனால் அவர்கள் காலப்போக்கில் மனம் மாறி அவர்களைப்போலவே தீய சிந்தனைகளை மேற்கொண்டுவிடுகின்றார்கள். ஒரு நல்ல தலைவரின் இலக்கணம்.

உண்மையான நாட்டுப்பற்று . வாய்மொழியில் மட்டும் இல்லாமல் மனதிலும் பரிபூரணமாய் இருக்கவேண்டும் .

நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் கொண்டுள்ள  உண்மையான அக்கறை மூலம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த அரசு இயந்திரத்தை கையாளும் உள்ளார்ந்த ஆர்வம்

தன்னைப்போலவே மற்றவர்களையும் மக்கள் நலப் பணியாற்றுவதற்கு வழிக்காட்டி ஒரு புதிய அரசியல் அணியை உருவாக்குதல்..

மக்கள் நலப்  பணியே தன் வாழ்நாள் பணி என்று ஏற்றுக்கொண்ட பிறகு பிற சுய தொழில்களில் ஈடுபடுதல் கூடாது . மக்கள் நலத் திட்டங்களை விளம்பரமின்றி செய்து முடிக்கவேண்டும் .    திட்டங்கள்  உண்மையிலேயே மக்களுக்குப் பயனளித்தால் அதை மக்கள் அரசுக்கு விளம்பரச் செலவு ஏதுமின்றி உலகமெங்கும் விளம்பரப்படுத்திவிடுவார்கள் .

ஆள்பவர்கள்  என்பதற்காக த் தேவையில்லாமல் அரசின் வருவாயைச் செலவு செய்யக் கூடாது . மக்களின் பணம் மக்களிடம் இருக்கும்போதுதான் நாடு மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள் ஆள்பவர்களை எப்போதும் குறை கூறுவதை விட்டுவிடவேண்டும் . ஆட்சியில் அமரத் தேவையானது மற்றவர் களின் குறைகள் இல்லை. ஆட்சியாளர்களின் எண்ணத்தில் இருக்கும் நாட்டு நலத் திட்டங்களே. . திட்டங்கள் என்பது வெறும் செலவு செய்வது மட்டுமில்லை  . அதற்கு காலத்தால் அழியாத திடமான உருவமும் இருக்கவேண்டும்,


Thursday, April 11, 2024

இயற்கையைப் பார்த்தும் தொடரும் புரிதலின்மை

 இயற்கையைப் பார்த்தும்  தொடரும் புரிதலின்மை

 கடலிலிருந்து நீர் ஆவியாகி  நாட்டு மக்களின் நலனுக்காக வானத்தில் மேகமாகி  எங்கு பண்டமாற்றம் பெறுமோ அங்கு விரைந்து சென்று ,மலை முகட்டில் முட்டி மோதி குளிர்ந்து மழையாகப் பொழிகின்றது . அது மலையிலே தங்கிவிடுவதில்லை.மலைக்கு இரக்கமுள்ள மனசு . பள்ளத்தாக்குகள் கொஞ்சம் நீரைத் தேக்கிவைத்துக்கொள்கின்றது . அதனால் குறிஞ்சி நிலப் பயிர்களும் ,பிற உயிரினங்களும் காலம் முழுதும் வாழ்கின்றன . மீதி நீரை  மலைச் சரிவில் ஓடவிட்டு மக்கள் வாழும் நிலப்பகுதியை அடையுமாறு செய்கின்றது. அதனால் நெய்தல் ,முல்லை நிலத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் கவலையின்றி வாழ்கின்றன. மக்கள் பயன்பாட்டிற்கும் எஞ்சிய நீரே மீண்டும் கடலில் போய் கலக்கின்றது . நீரின் இந்த வட்டச் சுற்று முறையில்  இயற்கையால் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. கடல் நீர் என்பது மக்களிடம் உள்ள பணம் . வரி என்பது அதன் ஆவியாக்கம் . மலை என்பது ஆட்சியாளர்கள் . மக்களின் பணம் ஆட்சியாளர்களை அடைந்ததும் அவர்களுடைய கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு என்ற இரக்க குணத்தால் அவர்களுடைய மடியிலேயே தங்கிவிடாமல் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக வடிந்து செல்லவேண்டும் . மலை நீர் என்பது மலைவாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்ல  அதில் நெய்தல் முல்லை நிலங்களில் வாழும் உயிரினங்களுக்கும் கூடுதல் பங்குண்டு  . மலை என்பது மக்களுக்காக சேவை செய்யும் ஒரு இடைஊடகம் மட்டுமே. அதுவே மழை நீரை விழுங்குவதில் லை

Tuesday, April 2, 2024

மக்களாட்சி மக்களுக்கு மன்னராட்சி மக்கள் சொன்ன கதை

 

ஒரு சின்னக் கதை

மக்களாட்சி மக்களுக்கு மன்னராட்சி மக்கள் சொன்ன கதை

அருகருகே இரண்டு குட்டிநாடுகள் . குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தன . ஒரு நாட்டில் மன்னர் இறந்து போக , அவருடைய வாரிசுகள்  பட்டம் சூட சண்டை போட்டுக்கொண்டார்கள். மன்னரின் ஒரு மகன் மற்றவவர்களை ஏமாற்ற ஒரு தந்திரம் செய்தான் . நாட்டு மக்களுக்கு எல்லாம் இலவசமாகத் தருவதாகவும் தன்னையே  பட்டம்  சூட்டிக்கொள்ள மக்கள் ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டான் இதை நம்பி மக்களும் அவனையே மன்னராக்கிக் கொண்டனர். சில காலம் அவனும் மக்களுக்கு உணவுப்பொருட்கள் ,துணிமணிகள் என்று கொடுத்தான். .வரவு இல்லாமால் எப்படி ஒருவர் செலவு செய்யமுடியும் . போகப்போக இலவசம் இளைத்துப் போனது . கொஞ்ச காலம் இலவசங்களைப் பெற்று மகிழ்ந்த மக்கள் உழைக்க மறந்தனர் .அவர்கள் அரசன் தரும் இலவசத்தை நம்பி சுய சம்பாத்தியத்தை இழந்தனர் அரசாங்கத்திற்கு வேண்டிய வரவை மக்களிடமிருந்து வாங்குவதற்கு வழியில்லாமல் இருந்தது .வறுமையிலும் பஞ்சத்திலும் பரிதவித்த நாடு காலத்தால் மாண்டுபோனது .

இலவசம் என்பது வரப்போகும் ஒரு பெரிய ஆபத்தின் அறிகுறி  என்பதை மக்கள் உணரவேண்டும் .       

Tuesday, December 26, 2023

பிள்ளையார் நோன்பு

 பிள்ளையார் நோன்பு

திருக்கார்த்திகை முடிந்து 21 நாள் கழித்து மார்கழி மாதத்தில் சஷ்டியும் சதயமும் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு வரும். பிள்ளையார் நோன்பு என்பது நகரத்தார்களுக்கு மட்டுமே உரிய ஒரு பண்டிகை

பிள்ளையார் நோன்பு அன்று  காலையில் சாமி வீட்டில் கோலம்போட்டு பிள்ளையார் படம் அல்லது சிலை யொன்றை வைக்க வேண்டும் . நெல்லுப் பொரி , எள்ளுப்பொரி  சோளப்பொரி கம்புப்பொரி , அவல் பொரி ஆகிய 5 பொரிகளையும் தனித் தனியாக கிண்ணங்களில்  வைத்து   பிள்ளையாருக்கு முன்பு வைக்க வேண்டும். கருப்பட்டி பணியாரம் பிள்ளையார் நோன்பிற்காகச் செய்யப்படும் ஒரு பலகாரம் . பச்சரிசி மாவில் கருப்பட்டிப் பாகினை ஊற்றிப் பிசைந்து முதல் நாளே தயார் செய்யவேண்டும்  . பிள்ளையார் நோன்பன்று கருப்பட்டி மாவில் கொஞ்சம் நீரூற்றி கரைத்து பணியாரம் சுட்டு பிள்ளையாருக்குப் படைத்தது  இழை எடுத்துக்கொண்ட பின் சாப்பிடவேண்டும். இத்துடன் வடையையும் சேர்த்துக்கொள்ளலாம்   

இழை எடுத்துக்கொள்வதற்காக கருப்பட்டி மாவில் கொஞ்சம் தனியாக எடுத்து    வைத்துக் கொள்ளவேண்டும். பிள்ளையாரை வணங்குவதற்கு முன் தனியாக எடுத்துவைத்திருக்கும் கருப்பட்டி மாவைக் கிள்ளி சிறு சிறு வடிவங்களாகப் [பிள்ளையார் வடிவில் (கூம்பு வடிவில்)] பிடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.21 மெல்லிய நூல் இழைகள் கொண்ட திரியை அந்த இழையில் வைக்க வேண்டும் . வீட்டில் உள்ள பெரியவர் அந்த இழை கொண்ட பிள்ளையாரை எடுத்து இழையை நெய்யில் தோய்ந்துக் கொடுக்கவேண்டும் .சிலர் அந்தத் திரியை விளக்கில் காட்டி ஏற்றிவிட்டுக் கொடுப்பார்கள் .முதல் இழை பிள்ளையார் இழை எனப்படும்.இதை எல்லோருக்கும் இழை எடுத்துக்கொடுக்கும் பெரியவரே பிள்ளையாரை வணங்கி விட்டு எடுத்துக்கொள்வார்.அதன் பிறகு மற்றவர்களுக்கு இழை எடுத்துக் கொடுப்பார் .வயதின் வரிசைப்படி  மூத்தவர்கள் முன்னாலும் இளையவர்கள் பின்னாலும் இழை எடுத்துக்கொள்வார்கள்.. சிலர் வெள்ளைப்பணியாரம் , திரட்டுப்பால் போன்றவைகளையும் செய்து பிள்ளையாருக்குப் படைத்துவிட்டு சாப்பிடுவார்கள் . வீடுகளில் பிள்ளையார் நோன்பு கொண்டாட முடியாதவர்கள் நகரத்தார் கோயில்களில் இழை எடுத்துக்கொள்வார்கள்.இதற்காக ஒரு நபருக்கு இவ்வளவு என்று குறிப்பிட்ட தொகையை வசூலித்து பிள்ளையார் இழை எல்லோரும் எடுத்துக்கொள்ளும்படி செய்கின்றார்கள்.கடைசியாக அந்தப்பெரியவர் தமக்குரிய இழையை எடுத்துக்கொள்ளவேண்டும் . கருவுற்ற பெண் கருவிலுள்ள பிள்ளைக்காக வும்  தாய் இழை எடுத்துக் கொள்ள வேண்டும்

பிள்ளையார் நோன்பு கொண்டாடுவதற்கு வலிமையான ஒரு காரணம் இருக்க வேண்டும். நம் மூதாதையர் பிள்ளையாரையே முழுமுதற் கடவுளாகத் தொழுதனர். அரசியல் காரணமாக இடம்பெயர்ந்தபோதும் ஆழிப்பேரலை காரணமாக இடம் பெயர்ந்தபோதும்  பொருள் இழப்போடு உயிர் இழப்பையும் சந்தித்தார்கள் .தங்கள் இனமே அழிந்துபோய்விடுமோ என்று அஞ்சினார்கள். தங்கள் இனம் விருத்தி யடையவேண்டும் என்று அனைவரும் முழுமுதற் கடவுளை வேண்டிக்கொள்ளும் நிகழ்ச்சியே பிள்ளையார் நோன்பு. அதனால்தான் கருவிலுள்ள சிசுவிற்கும் இழை எடுத்துக்கொடுக்கின்றார்கள்

.21 நூல் இழைகள் கொண்ட திரி என்பதற்கும் ஒரு நோக்கம் அடிப்படையாக இருக்கவேண்டும் . தொடக்கத்தில் வைசியர்களாக வாழ்ந்த நகரத்தார்கள் எல்லோரும் ஒரு வகையினராக இருந்து மரகத விநாயகரை வழிபட்டனர் .அரசியல் காரணமாகவும் ஆழிப்பேரலை காரணமாகவும் அவர்கள் இருமுறை புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.சோழ நாட்டில் காவிரிப்பூம் பட்டினத்தில் வாழும் போது மூன்று வீதிகளில் வாழ்ந்து வந்தனர் .அரசியல் காரணமாகப் பலர் உயிரிழந்தனர் .பலருக்கும் திருமணம் செய்துகொள்ள அவர்கள் இனத்திலேயே பெண் இல்லாமல் இருந்தது   அரசனின் அனுமதி பெற்று வெள்ளாள இனப் பெண்களை மணந்து கொண்டனர் . சோழிய வெள்ளாளர் இனப் பெண்களை மணந்து கொண்டவர்கள் இன்றைக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று அழைக்கப்படுகின்றார்கள். திருமண உறவுகள் காரணமாக இவர்கள் 9 கோயில் பிரிவினராகப் பிரிந்து வாழ்ந்தனர் .அவை இளையாற்றங்குடி ,மாத்தூர், வைரவன் கோயில் ,நேமங்கோயில் , சூரைக்குடி ,இலுப்பைக்குடி ,வேலங்குடி பிள்ளையார் பட்டி, இரணியூர். இக்கோயில்களுள் இளையாற்றங்குடியார் 7 உட்பிரிவுகளோடும் , மாத்தூரார் 7 உட்பிரிவுகளோடும். திருமண உறவுகள் மேற்கொள்ளும் அடிப்படை யில் நகரத்தார்களிடையே மொத்தம் 21 பிரிவுகள் உள்ளன . இந்த 21 பிரிவினரும் ஒற்றுமையாகவும் சீரும் சிறப்போடும் உடல் நலத்தோடும் வாழ வேண்டும் என்று பிள்ளையார் ஆசிர்வதித்து இழை கொடுக்கவேண்டும் என்று 21 நூல் இழைகளை இணைத்து வைத்திருக்கின்றார்கள்

Sunday, December 17, 2023

 The rituals and ceremonies in the marriage of Nattukkottai Nagarathar.


 Topic : The rituals and ceremonies in the marriage of Nattukkottai Nagarathar. (நாட்டுக்கோட்டை நகரத்தார் வீட்டுச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் 1. பிள்ளைகளின் திருமணம்)

Publisher: Amazon KDP Digital Edition, 16 ,December 2023

Registration Number ASIN BOCQCJX1FX

Language: Tamil

Pages 50 cost 2 USD 

The only society that serves as a good example for all the people in the world to follow, is Natukottai Nagarthar in Chettinadu,India.. What gave them such excellence was their morals of life with  social prosperity. The deep  experiences of our ancestors followed year after years  are embedded in all of our rituals and ceremonies . They  can simply confirm  everyone a happy home and social life without any external effort with  physical works. Everyone's houses were full of gloom and we were living like generation after generation . There was no word of divorce . Without understanding their implications by adopting the mechanical life in the fast-paced world, we are discarding certain rituals and ceremonies. This book is written from the point of view of understanding the inner meaning of the rituals and ceremonies by everyone  and not putting them aside.When we enjoy the inherent benefits associated with our rituals and ceremonies by simply following them it provides a kind of social safeguard .