மக்களுக்கு என்னென்ன இலவசம் எப்போது கொடுக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்வேன் என்பதை ஒத்துக்கொள்ளலாம் . ஆனால் அரசு சார்ந்த எல்லாப் பதவிகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை இறுதி முடிவு செய்யலாம் .ஆனால் பட்டியலையே நான்தான் செய்வேன் என்பது தவறு. பொதுத் தேர்தலுக்கு தொகுதிகளில் நிறுத்தவேண்டிய வேட்பாளர்களை குழுவின் உதவியின்றி நானே முடிவு செய்வேன் என்பது தவறு . பரிசும் விருதும் வழங்கும் விழா நீங்கள் ஒருவரே முடிவு செய்யலாம் ஆனால் பரிசுக்கு ம் விருதுக்கும் உரியவரைத் தேர்வுசெய்வது ஒரு தகுதியான குழுவேயன்றி தனியொருவர் இல்லை. அரசின் அணைத்து நிகழ்ச்சிகளும் செயல்பாடுகளிலும் ஒருவரின் முடிவால் மட்டுமே நிகழும் என்றால் அரசு ஊழியர்களை அடிமைகளாக மட்டுமே செயல்படமுடியும். உயர் அதிகாரிகரிகள் கண்காணிக்கலாம். பணிக்கு அவர்களைத் தேர்வு செய்துவிட்டு அவர்களுடைய அடிப்படை வேலையையே தானே செய்வது எதோ உள்நோக்கம் இருக்கும் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது
creative thoughts
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Friday, January 23, 2026
Wednesday, January 21, 2026
மக்களுக்காகத்தான் நாம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றோம் என்று எண்ணாமல் ,நமக்காகத்தான் அவர்கள் என்று எண்ணும் போக்கு நம் அரசியல்தலைவர்களிடம் மலிந்திருக்கின்றது . நாட்டின் வளத்தை அவர்களுடைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் . ஒளிமயமான எதிர்காலத்திற்கு திட்டமும் செயல்படும் இல்லை . கட்டமைப்பும் ,அனைவருக்குமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இல்லை.போதிய வசதிகள் வாய்ப்புக்கள் இன்றி மக்கள் தொகைப் பெருக்கம் ,வாகனங்களின் அதிகரிப்பு போன்றவற்றில் கட்டுப்பாடின்மை, ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல் , அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கு , நிர்வாகச் சீர்கேடுகள், தீயவர்களின் வளர்ச்சி ,போன்றவற்றால் இந்திய நாட்டின் எதிர்காலம் இருட்டாக இருக்கின்றது
Friday, January 16, 2026
Tuesday, January 13, 2026
மறு பிறப்பு உண்டா என்ற கேள்வி கேட்டால் உண்டு என்று சொல்லும் தைரியத்தை அமெரிக்காவின் தற்போதைய ப்ரெசிடெண்ட் தந்துள்ளார். ஹிட்லர் மீண்டும் பிறந்து வந்துவிட்டவரைப்போல அவர் நடந்துகொள்கிறார் . ஹிட்லர்தான் உலக நாடுகள் அனைத்தையும் ஆள்வதற்கு ஆசைப்பட்டு போர் செய்தான் . சந்திரமுகி என்ற தமிழ் படத்தில் ஒரு வசனம் வரும் அதுதான் ஞாபகத்திற்கு வருகின்றது . எழுந்து நிக்கவே முடியலையாம் ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம் .அதுபோல ஒரு நாட்டையே ஆளமுடியலையாம் ஒன்பது நாடு கள் வேண்டுமாம் . கனிம வளம் வேண்டும் என்று விரும்பினால் சந்திரனுக்கு போங்க ,செவ்வாய்க்கு போங்க யார் தடுத்தா ?
Sunday, January 11, 2026
இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு இருக்க வேண்டும் . அதற்கு பண்டமாற்றங்களோடு கல்வி ,தொழில் வளர்ச்சிகளில் கூட்டுறவு மேற்கொள்ளவேண்டும் . தேவையின்றி ஒரு நாட்டின் கலாச்சார மற்றும் மரபு வழியிலான நிகழ்வுகளில் குறுக்கிடுவதும், இயற்க்கை அவர்கள் வாழ்வதற்காக அளித்த இயற்க்கை வளங்களை அபகரிக்க நினைப்பதும் வல்லுறவை ஏற்படுத்தும். இது பிற நாட்டு மக்களிடமும் ,தலைவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும். தவறியும் தவறான தீய பழக்கங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள் என்று தமிழ் உலக முன்னோர்கள் கூறியதை ஏனோஇவர்கள் மறந்துவிட்டார்கள்.
Saturday, January 10, 2026
மாணவர்கள் அதிக விழுக்காடு தேர்வில் தேர்ச்சி பெற்றால் அதற்கு நாங்கள்தான் காரணம் . உலக அரங்கில் விளையாட்டில் வெற்றிபெற்றால் நாங்கள் தான் காரணம் , வெளிநாட்டில் CEO வாக வேலைசெய்வோர் எண்ணிக்கை மிகுந்தால் அதற்கு நாங்கள்தான் காரணம் , இப்படி இயல்பாக நடக்கும் எல்லா நல்லனவற்றிற்கும் தங்களை இணைத்துக் கொள்ளும் நம் அரசியல்தலைவர்கள் , சீனாவை விட இந்தியா பொருளாதாரதில் பின்தங்கி யிருப்பதற்கும் அவர்களே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றார்கள் . சீனாவை விட இந்தியா பொருளாதாரத்தால் பின்தங்கி இருக்கலாம் ஆனால் இந்திய அரசியல்வாதிகள் அவர்களைவிட பணக்காரர்க ளாக இருக்கின்றார்கள் .