Monday, October 3, 2011

arika iyarppiyal

செங்குத்தான இரு ஆடிகளில் தோன்றும் பிம்பம்

இரு சமதள ஆடிகளை ஒன்றுக்கொன்று செங்குத்தாக
இருக்குமாறு பொருத்தி ,அதன் தொடுகோட்டிற்கு நேர்குத்தாக
இருந்து கொண்டு உன்னுடைய பிம்பத்தை நீயே பார்க்கும்
போது பிம்பம் எப்படித் தோன்றும் ?

இந்த இரட்டைச் சமதள ஆடி அமைப்பில் உங்களை
நீங்களே பார்க்கின்ற போது உங்கள் ஒரு பகுதி பிம்பம் கூட
சாதாரணமாகப் பார்க்கப்படுகின்ற ஒற்றைச் சமதள
ஆடியிலிருந்து கிடைக்கப் பெற்றதில்லை.அமைப்பிலிருந்து
ஏதாவதொரு ஆடியை நீக்கிவிட்டால் ஒரு பிம்பம் கூட
ஏற்பட்டுத் தோன்றுவதில்லை.
இரட்டை ஆடியின் முன்னுள்ள பொருளின் இடப்பக்கம் ,
இடக்கை ப் பக்கமாய் அமைந்துள்ள சமதள ஆடியில்
45 டிகிரி கோணத்தில் விழுந்து எதிரொளித்து வலப்பக்க
சமதள ஆடியில் 45 டிகிரி கோணத்தில் விழுந்து எதிரொளித்து
வலப்பக்கமாய் வெளியேறுகிறது .இது போல பொருளின் வலப்பக்கம்,இடப்பக்கமாய் வெளியேறுகிறது .இதனால்
பிறர் நம்மை எப்படிப் பார்கின்றார்களோ அது போல
நாம் நம்மைப் பார்க்க முடியும்.நிலைக் கண்ணாடியில்
பார்க்கும் போது இடவலம் மாறித் தோன்றுவதைப் போல
இரட்டைக் கண்ணாடியில் தோன்றுவதில்லை.

பிம்பங்களின் பிம்பங்கள்

இரு சமதள ஆடிகளை செங்குத்தாக நிறுத்தி ஒன்றுக்கொன்று
ஒரு குறுங் கோணத்தில் அமையுமாறு வைக்கவும் .
குறுங் கோணத்தை விரிக்கும் போதும் ,சுருக்கி இணையாக
இருக்குமாறு வைக்கும் போதும் ,அவைகளுக்கு
இடையில் வைக்கப்பட்ட மெழுகு வர்த்தியின் பிம்பம் எப்படித்
தோன்றும் ?

இரு சமதள ஆடிகளுக் கிடையேயான கோணம் குறையக்
குறைய பிம்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து
அதிகரிக்கின்றது. இரு ஆடிகளும் ஒன்றையொன்று
பார்திருக்குமாறு இணையாக இருக்கும் போது
ஆடியில் ஒரு நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்ட
எண்ணிலா மெழுகு வர்த்தி பிம்பங்களைக் காணலாம் .

No comments:

Post a Comment