Friday, October 7, 2011

arika iyarppiyal

சிறிய துவாரமும் பெரிய துவாரமும்

ஓர் ஊசி முனைத் துவாரத்தால் சூரியனின் விட்டத்தை
அளவிட்டறிய முடியுமா ?


முடியும். ஒத்த இரு முக்கோணங்களின் வடிவியலை ஒப்பிட்டு ,
மலையின் உயரம் ,வானளாவிய கட்டடத்தின் உயரம்
இவற்றை அளவிடுவதைப் போல சூரியனின் விட்டத்தையும்
அளவிட்டறிய முடியும்.

பகலில் ஓர் இரவு


பகற் பொழுதில் வீட்டிற்கு வெளியில் இருந்து கொண்டு
திறவலான ஜன்னல் வழியே நோக்கினால் ,ஜன்னல் பகுதி
இருளாகத் தெரிவதேன் ?

பகற் பொழுதில் திறவலான ஜன்னல் கருமையாகத்
தெரிவதற்குக் காரணம் ,அதன் வழிச் செல்லும் பெரும் பகுதி
ஒளி எதிரொளிக்கப் பட்டு திரும்பி வெளியேறுவதில்லை .
கண்ணின் மணி கறுப்பாய்த் தோன்றுவதற்குக் கூட இதுதான்
காரணம் .ஆனால் அறைக்குள் ஒரு மின் விளக்கைப் போட்டால் ,
அது உமிழ்ந்து பொருளில் பட்டுச் சிதறும்
ஒளியால் ஒருவர் ஜன்னலுக்கு வெளியிலிருந்து எப்போதும்
உட்பகுதியைக் காண முடியும்

No comments:

Post a Comment