Saturday, October 22, 2011

eluthatha kaditham

எழுதாத கடிதம்

குறை கூறுவதைத் தவிர்த்து விட்டு நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுங்கள் என்று
இந்தியப் பிரதமர் அவர்கள் கூறியுள்ளார்கள்.அவரைப்பற்றி பல அரசியல்
தலைவர்களும் குறை கூறும் கால கட்டத்தின் உச்சக்கட்டத்தில் அவருடைய
இக் கருத்து வெளிப்பட்டிருக்கிறது. இக் கூற்றில் மறைந்திருக்கும் இரண்டு
செய்திகள் என்னை இதை எழுதத் தூண்டியிருக்கிறது .

அரசியல் தலைவர்கள் தங்கள் சொல்வதையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்காக
என்றே கூறுவார்கள்.வெறும் சொற்கள் மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில்
எடுத்துச் செல்லாது. அதில் அவர்களுக்கே உண்மையான நம்பிக்கை
இருக்கவேண்டும். தன்னுடைய கருத்தைச் சொல்லிவிட்ட பிறகு அது
செயல்முறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறதா என்பதையும்
முறையாகக் கண்காணிக்க வேண்டும்.நான் சொல்லிவிட்டேன் அதைச் செயல்
படுத்துவது மற்றவர் கடமை என்று தன்னை ஒதுக்கிக் கொண்டுவிடக்கூடாது .

முதலாவது குறை குறை கூறுவதை விட்டு விடுங்கள் என்பதாகும்.
இல்லாத குறைகளைச் சொல்வதை வேண்டுமானால் விட்டுவிடலாம்.
உண்மையில் இருக்கும் குறைகளை கூறாது விட்டுவிட்டால் அக்குறை
மென்மேலும் தன்னூக்கப்பட்டு வளர்ச்சி பெறாதா. அப்படித்தான் இன்றைக்கு
நாட்டில் ஊழலும் தனி மனிதன் தாங்க முடியாத சுமுதாயக் குற்றங்களும்
பெருகியுள்ளன.சிறிய அளவிலான ஊழலை இப்படி யாரும்
கண்டுகொள்ளாததால் அது பெரிய அளவில் வளர்ந்து போனது. பெரிய
அளவில் நடைபெற்ற எந்த ஊழலையும் அரசே கண்டு வெளிப்படுத்தியதாக
சான்றே இல்லை. அதையெல்லாம் மக்களே கண்டு வெளிப்படுத்தி
இருக்கிறார்கள் .மக்களால் இன்னும் கண்டு கொள்ளப்படாத ஊழல்கள் எல்லாம்
இன்னும் இலை மறைவாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இவை எல்லாம் என்றைக்கு நாட்டையே விழுங்கப்போகிறதோ .

அங்குமிங்குமாக நடைபெற்ற ஊழல்களும்,குற்றங்களும் இன்றைக்கு அன்றாடம்
எங்கும் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது.இல்லாத குறைகளை கூறாது விட்டு
விடலாம். ஆனால் உண்மையிலேயே இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டது
விட்டு விட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் அக்கறை காட்டாமல்
இருப்பதற்கு இவை தனி மனிதரின் விஷயங்கள் இல்லை.

மற்றொன்று நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுங்கள் என்று முதல்வர்களுக்கு
அழைப்பு விடுத்திருப்பது .இது நாடு உண்மையிலேயே வளர்ச்சியடையவில்லை
என்றெண்ணும் மனதி வெளிப்பாடாகும் .வளர்ச்சியை வரையறை
செய்யாமல் விவரிக்கும் போது அதன் உண்மைநிலை படித்தவர்களுக்குக்
கூடப் புரிவதில்லை .

நம்மை விட மக்கட்தொகை மிக்க சீனாவின் வளர்ச்சியை ஒப்பிட,
இந்தியாவின் வளர்ச்சி ஒன்றும் பெரியதாக இல்லை.எத் துறையை எடுத்துக்
கொண்டாலும் அதில் சீனா மேலோங்கியே இருக்கிறது. மக்கட் தொகை
வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது என்று அவர்கள் எதிர்மறையாக
எடுத்துக் கொள்ளாமல் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு வளர்ச்சிப் பாதையில்
முன்னேறி வருகிறார்கள்.கட்டுமானப் பணிகள் ,தொழிற் சாலைகள் ,உற்பத்தி ,
பாதுகாப்பு,வர்த்தகம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதில் அவர்கள்
தங்களை முதன்மைப் படுத்திக் கொண்டு வருகிறார்கள் .அவர்கள் வளர்ச்சியைக்
கண்டு பல மேலை நாடுகள் அச்சம் கொண்டுள்ளன .

முறையான திட்டங்களும் உண்மையான ஈடுபாடும் இல்லாமல் அத்தகைய
உறுதியான வளர்ச்சியை இந்தியா பெறவே முடியாது.
ஊழல்களை மறைத்து விடுவதால் .ஊழல் நடைபெறவே இல்லை என்ற
எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட முடியும் .ஆனால் ஊழல்
மக்களிடையே மகத்தான வளர்ச்சி பெரும் .அதற்க்கு ஊழலைக்
கண்டுகொள்ளாத அரசே காரணமாக இருக்கமுடியும் .
சுய ஒழுக்கமும் ,சட்டமும் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாத போது
அதை ஓரளவாவது கட்டுப்படுத்தக் கூடும் என்ற நம்பிக்கையைத் தருவது இந்த
உண்மையான மக்கள் மன்றக் குற்றச் சாட்டுகளே .

No comments:

Post a Comment