Thursday, October 6, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்
2011 ஆம் ஆண்டிற்கான அமைதி நோபல் பரிசுக்கு இந்திய
அரசியல் தலைவர் ஒருவர் பரிந்துரைக்கப் பட்டார் என்ற
செய்தி நாளிதழ்களில் கண்டேன் .ஓர் இந்தியர் உலக
அளவில் பெருமை பெற்றார் என்றல் அது நமக்கும்
பெருமைதான் .ஆனால் நமக்கு அனுகூலம் என்றால்
நடுவு நிலைமையை மறந்துவிடுகின்றோம்.
அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு இன்றைக்கு
இந்தியாவில் எந்த அரசியல் வாதியும் இல்லை.அதைப்
பெறுவதற்கு முழுமையான தகுதியும் தராதரமும் கொண்ட
ஒரே ஒருவர் காந்தியடிகள் என்றொரு மகாத்மா இருந்தார் .
காந்தியம் என்ற மிக அற்புதமான கொள்கையைக் கண்டுபிடித்து,
கடைப்பிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார் .
இறந்த வர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பதில்லை என்ற
விதிமுறை விடாமல் கடைப்பிடிக்கப் படுவதால்
அவருக்கு அந்தப் பெருமை வழங்கப்படவில்லை.
காந்தியடிகள் நோபல் பரிசுக்காக எதையும் செய்யவில்லை ,
அது அவருடைய நோக்கமும் இல்லை. அதனால் அவருடைய
ஆத்மா அதற்காக வருத்தப்பட்டதுமில்லை .
பொதுவாக ஒருவருடைய கருத்து மக்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும் போது அதை
ஊக்கப் படுத்துவதற்காக அவருக்குப் பரிசு வழங்குவார்கள் .
காந்தியத்திற்க்காக யாருக்குமே பரிசு வழங்கப் படாவிட்டால்
அது வளர்ச்சி பெறாமல் அழிந்து போய்விடாதா.காந்தியத்தை
பின்பற்றி சமாதானம் செய்துகொண்டவர்களுக்கெல்லாம்
நோபல் பரிசு ஆனால் காந்தியத்திக் கண்டுபிடித்தவருக்கு
அந்தப் பரிசு இல்லை என்றால் இதில் எதோ குறைபாடு
உள்ளது போலத் தோன்றுகிறது .
காந்தியைப் போல இன்னொருவர் இனி பிறக்கப்போவதில்லை
எனவே அதற்காக நோபல் பரிசுக் குழுவினர் காத்திருக்கத்
வேண்டியதில்லை. காந்தியின் சார்பாக அதை இந்திய மக்களுக்கு வழங்கலாம் .காந்தியின் அறக்கட்டளைகள் பல இதனால்
புத்துயிர் பெறுமே.
எதுவும் மாறிக்கொண்டே இருப்பது ஒன்றுதான் இந்த
பிரபஞ்சத்தில் மாற்றம் ஏதுமின்றி நடந்துகொண்டே இருக்கிறது.
எனவே விதி விலக்குகளில் ஒரு மாற்றம் கொண்டுவருவது என்பது இயற்க்கைக்கு மாறானதில்லை.
மகாத்மாவிற்காக விதி விலக்குகளில் ஒரு மாற்றம் செய்வது
நோபல் பரிசுக்கு மேலும் பெருமை சேரும்
.

1 comment: