Monday, August 24, 2020

God-12

கடவுள் -12

இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் அவை உயிரற்றவையாக இருந்தாலும் உயிருள்ளவைகளாக இருந்தாலும் அடிப்படை மூலப்பொருட்கள் ஒன்றே, இயற்கையைப் பொறுத்தமட்டில் உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் என்ற பாகுபாடு கிடையவே கிடையாது.அவை யாவும் அணுக்களாலும், அவற்றின் கட்டமைப்பால் உருவாகும் மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்டவைகளாக இருக்கின்றன, மூலக்கூறுகளின் உணர்திறன் ,அணுக்களைவிடப்  பல மடங்கு அதிகமானது என்பதால் உயிரினங்களின் கட்டுமானத்தில் அவை முக்கியப் பங்கேற்கின்றன  ஆனால் இந்த அணுக்கள் அணுக்களாகவே உற்பத்திசெய்யப்படுவதில்லை. அணுக்கள் தொகுப்பாக்கம் மூலமும் ,  அணுக்களின் மூலப்பொருட்களான புரோட்டானும் ,எலெக்ட்ரானும் நேரடியாக ஆற்றலிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன, . ஆற்றலிலிருந்து பருப்பொருளாக்கம் (materialization) மூலம் புரோட்டானும், எலெக்ட்ரானும் ஆற்றல்மாறாக் கோட்பாட்டிற்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டாலும் , ஆற்றலிலிருந்து நேரடியாக அவை எப்படி உருவாகின்றன?. அப்படி உருவாகும் போது அவைகளுக்கு எப்படி மின்னேற்றம் (Charge) கிடைக்கின்றது?  என்பதெல்லாம் இன்றளவும் புரியாத புதிராகவே இருக்கின்றன .  .விஞ்ஞானத்தில் எவ்வளவு  விளக்கம் தேடியும் சரியான  விடை கிடைக்கவே இல்லை . அடைப்படைத் துகள்கள் யாவும் ஆற்றலிலிருந்து மின்னேற்றத்துடனும், குவாண்ட மதிப்புடன் கூடிய இயற் பியல்  பண்புகளுடனும்  இயற்கையால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை மறுப்பின்றி ஏற்றுக்கொள்வது மட்டுமே இதற்குத் தீர்வாகின்றது.  . அணுவின் கட்டமைப்பை விவரிக்கும் போது நீல்ஸ் போர் (Niels Bhor) என்ற என்ற விஞஞானி  இந்த வழிமுறையைத் தான் கையாண்டார். அணுக்கருவைச் சுற்றி  வலம்  வரும் எலெக்ட்ரான் முடுக்கப்பட்ட இயக்கத்தின் காரணமாக ஆற்றலை உமிழாமால்  தொடர்ந்து  இயங்குகின்றது என்பது அறிவியல் விதிக்கு மீறியது என்பதை விட இயற்கையால் அனுமதிக்கப்படுகிறது என்றே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இவர் கூறுவார்

 இந்தப் பிரபஞ்சம் பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றியது என்று கூறுகின்றார்கள். இந்த பெரு வெடிப்பு  உண்மையிலேயே நிகழ்ந்திருக்குமா  என்பதற்கு  பெருவெடிப்புக்கு முன்னர்  இந்த பிரபஞ்சம் எப்படி இருந்தது? காலத்தின் நிலை என்ன ? என்பதற்கான விளக்கம் கொடுக்க முடியாமல் போனதே ஒரு வலிமையான காரணமாக இருக்கின்றது . எல்லையற்ற வெளியையும் , ஆற்றலையும் இயற்கை பெரு வெடிப்பு நிகழ்ந்த அந்தக் கணத்திலேயே பெறுவது என்பது மந்திரத்தால் மட்டுமே முடியும். வெளியும் பொருளோடு சேர்ந்து விரிவடைகின்றதா இல்லை ஏற்கனவே இருக்கும் வெளியில் பொருட்கள்  மட்டும் விரிவடைகின்றனவா  என்பதற்கான விளக்கத்தை அறிவியல் பூர்வமாக அளிக்கமுடியாததால் பிரபஞ்சத்தின்   தொடக்கத்தைக்கூட அறிவியல் முரண்பாடு என்பதை விட இயற்கை அனுமதிக்கின்றது என்றே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. 

புரோட்டானும் எலெக்ட்ரானும் கூடும்போது மிகுந்த ஆற்றல் பெற்றிருக்கும் நிலையில் அவை ஒன்றிணைந்து நியூட்ரானாக மாறுகின்றன.நியூட்ரான் நடுநிலை மின்னூட்டம் கொண்ட துகள். அணுக்கருவிற்குள் நேர்மின்னூட்டம் கொண்ட புரோட்டான்கள் விலகிச் செல்லாமல் ஒட்டியிருக்குமாறு செய்வது இந்த நியூட்ரான்களே. தாழ்ந்த ஆற்றல் நிலையில் அவை ஹைட்ரஜன் அணுவாக மாற்றம் பெறுகின்றன.இதில் எலெக்ட்ரான் புரோட்டானைச் சுற்றி ஒரு சில குறிப்பிலிட்ட இடைவெளியுடன் சுற்றி வருகின்றது..எலெக்ட்ரானின் இச் சீரிசைஇயக்கம் தானாக ஏற்படுமாறு செய்வது இயற்கையின் கட்டளை  இயற்கையைத் தவிர இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த யாராலும் முடிவதில்லை.

ஒரு சிறிய விதையில் ஒரு  மரத்தின் முழு எதிர் காலமும் எழுதப்பட்டிருக்கின்றது.எந்த மரத்திலிருந்து வந்ததோ அதைப் போலவே பூத்து, காய்த்து, அதே சுவையுடன் கூடிய காய்களையும் பழங்களையும் தருகின்றது விந்தணுக்களின்  மரபியல் ஒவ்வொரு குடும்பத்திலும் பரம்பரை பரம்பரையாகத் தொடர்கின்றது. .மூலக்கூறுகளின் குறிமொழியை இயற்கையால் மட்டுமே இயற்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியமைக்க முடியும் .மனிதர்களால் மாற்றியமைக்கவேமுடியாது. அப்படி மாற்றியமைத்தால் அது இயற்கைச் சமநிலையைப் பாதிப்படையச் செய்து எதிர்மறையான பின்விளைவுகளையும்   பரிணாம வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.       

அணுக்களில் எலெக்ட்ரான்கள் இயக்கத்தை பச்சைக் கொடி காட்டி துவக்கிவைத்தவர் யார் ? நுண்ணிய விதைகளில் அதன் எதிகாலத்தைத் திணித்து வைத்தவர் யார் ? விந்தணுக்களில் மூலக்கூறுகளின் குறிமொழி மாறாமல் தொடரும் படி செய்ததுயார் ? இதைச் சிலர் கடவுள் என்பர் வேறு சிலர் இயற்கை என்பர் .கடவுள் இயற்கையே என்பதை வலியுறுத்திக் கூறுவதற்கு இவை போதுமானதாக இருக்கின்றது


No comments:

Post a Comment