Thursday, December 1, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே-2

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே 

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று சிலர் கூறுவார்கள் ஏமாறுபவர்கள் இருப்பதால் ஏமாற்றுபவர்கள் வந்தார்களா இல்லை ஏமாற்றுபவர்களால் ஏமாறுபவர்கள் உருவாக்கப்படுகின்றார்களா? .இது ஏறக் குறைய கோழியிலிருந்து முட்டைமுதலில்  வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி முதலில் வந்தததா என்று கேட்பதைப் போல இருக்கின்றது. கோழி-முட்டை பிரச்சனைக்கு அறிவியல் பூர்வமான ஒரு தீர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது . இயற்கையில் எதுவும் அப்படியே  தோன்றுவதில்லை .ஏனெனில் அப்படித் தோன்றுவதற்குத் தேவையான ஆற்றலும் பொருளும் ஒரே வரவில் கிடைப்பதில்லை. உயிரினங்களின் இனப்பெருக்கம் நம்மக்குச் சுட்டிக் காட்டும் மிகப்பெரிய உண்மை பிரபஞ்சத்தில் எதுவும் ஒரு நுண்ணிய கருவிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது அது ஆற்றலையும் பொருளையும் உட்கவர்ந்து தான் விருப்பப்படும் அளவிற்கு பெரிய உருவதைப் பெறுகின்றது. இது உயிரினங்களுக்கு மட்டுமில்லை இப்பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்கள், விண்மீன்கள் என எல்லா உயிரற்ற பேரியல் பொருட்களுக்கும் கூடப் பொருந்தும்  மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றமில்லாத இந்த விதிதான் பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுகளையும் தீர்மானிக்கின்றது  . இந்த விதி  நுண்ணிய முட்டையிலிருந்து சிறிய உயிரினம் பிறந்தததையும் அந்த உயிரினம் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் பெற்று வளர்ந்து கிளைகளாகப் பிரிந்ததையும்  தன் இனத்தின் சாகாமைக்காக்க பெரிய முட்டைகளை இட்டு வந்ததையும் தெரிவிக்கின்றது . இயற்கையில் முட்டை இடுகின்ற  கோழி  இருக்கலாம் , கோழியைத் தரும் முட்டை இருக்கலாம் ஆனால் எது முதலில் வந்தது என்று கேட்டல் முட்டைதான் முதலில் வந்து கோழிக்கு அடிப்படையான சிறிய உயிரினங்களை உருவாக்கியிருக்கவேண்டும் என்று கூறலாம். 

ஏமாறுபவர்கள் என்ற இனம் ஏமாற்றுபவர்கள் வந்த பின்னரே உண்டானது . ஏமாற்றுபவர்களே தவறான சிந்தனையை மேற்கொண்டு புதிய பாதையை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதற்கு முன்பு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட பாதையில் தொடர்ந்து செல்லும் மனிதர்களை  ஏமாறுபவர்களாக்குவதை விட ஏமாற்றுபவர்களிடமிருந்து பாதுகாக்கப் படவேண்டும், அந்தப் பாதுகாப் பைத் தராத எந்த நாடும் உண்மையில் நாட்டின் நலத்தில் அக்கறையில்லாத நாடேயாகும்

No comments:

Post a Comment