Sunday, December 4, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-5 

ஆடம்பர வாழ்க்கை தரும் போலியான சுகங்களை அனுபவிக்கும் வாழ்க்கைமுறையில் ஏக்கம் கொண்டு அதை அடைய நேர்மையான வழியைப் பின்பற்றத் தகுதியின்றித் தவறிவிடுவதா லும்  அதையும்   விரைந்து பெற குறுக்குவழியில் முயல்வதாலும் அவர்கள் மேற்கொள்ளும் எம்முயற்சியும் பலனளிப்பதில்லை. அவர்களுடைய வாழ்க்கையில் செலவிற்கு அளவில்லாத திட்டங்கள் இருக்கும் அனால் வரவிற்கு உருப்படியான உண்மையான நேர்மையான திட்டங்கள் ஏதும் இருப்பதில்லை  தொடர்ந்து  வரவின்றி செலவு செய்யும் போக்கால்   நிலைமாறாத அவர்களுடைய நிரந்தரமான ஏழ்மைக்கு வசதியாக வாழ்பவர்களே காரணம் என்ற எண்ணத்தை த் தூண்டிவிடுகிறது. 

இரண்டாவது காரணம் ஒருவருடைய வாழ்வாதாரத்தில் குறுக்கீடு செய்வதால் ஏற்படும் பின்விளைவுகளாக்கும் .ஒரு நாட்டில் வாழும் அனைவருக்கும் வாழ்வாதாரம் இருக்கவேண்டும். நாட்டின் பொது அமைப்பு இதை உறுதி செய்யவேண்டும் .இதில் அரசாங்கம் தவறு செய்யும் போது வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தவறான செய்லபாடுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள்  அரசாங்கம் அறியாமையால் இது போன்ற பிழைகளைச் செய்ய வாய்ப்பில்லை. ஏனெனில் நாட்டின் மிகச் சிறந்த அறிவாளிகள் ஆள்பவர்களாக இல்லாவிட்டாலும் பலர் அதிகாரிகளாக இருக்கின்றார்கள் . இவர்கள் ஆள்பவர்களுக்கு சரியான யோசனை கூறாமல் அவர்களின் தவறான எண்ணப் போக்கிற்கு கூடுதல் வழிகாட்டி உதவும் போது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் பணக்கார ஏழைகளாக மாறிவிடுகிறார்கள்

ஒரு நல்ல அரசாங்கம் தன் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்குமாறு திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் .ஒருவருக்கு இருக்கும் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்  கொடுக்க வேண்டும் . தவறான வழியில் வளரும் வாழ்வாதாரங்களை தொடக்கநிலையிலேயே முன்னறிந்து தடுக்க வேண்டும். முற்றிய நிலையில் அதைத் தடுக்க முடியாது.  தடுப்பதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால் பெரும்பாலும் அதை அரசாங்கம் கவனிக்காமலேயே விட்டுவிடுகிறது. அதைச் சமுதாயப் பிரச்சனையாகக் கருதாமல் தனி மனிதர்களுடைய பிரச்சனையாகக் கருதுவதால் இது போன்ற பொதுப்பிரச்சனைகள் காலங்காலமாய் தீர்வின்றி விமர்ச்சிக்கப்படுவதோடு நின்றுவிடுகிறது . ஒரு நாடு என்பது நாட்டு மாக்கள் அனைவர்க்கும் பொதுவானது. அதை ஆள்பவர்கள் தனக்கு உரிமையானது போல நடந்து கொள்ளும் போது இந்தப்பிரச்சனை மேலும் சிக்கலுள்ளதாகிவிடுகின்றது .ஒரு பொருள் நாலுபேருக்கும் பொதுவானதாக இருக்கும் போது அப்பொருள் நால்வராலும் பாதுகாக்கப் படுகின்றது .மாறாக ஒருவருக்கு மட்டுமே உரிமையானது என்றால் மற்றவர்களால் அது பாதுகாக்கப்படுவதில்லை . இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நாட்டிலுள்ள அனைவராலும் நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்றால்  அதில் அனைவருக்கும் பொறுப்பைத் தருகின்ற பங்களிப்பு இருக்கவேண்டும்    

 

No comments:

Post a Comment