Monday, December 5, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-6 

நாடு அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் சம உரிமையுள்ளது. ஆள்பவர்களுக்கு அதிக உரிமை இல்லை.அப்படிப்பட்ட வளர்ச்சி ஆபத்தானது இது எப்போதும் சர்வாதிகார ஆட்சிமுறையில் முடிவடையும். உண்மையில் ஆட்சியாளர்களுக்கு அதிகச் சேவையாற்றும்  கடமையேயுள்ளது.  சேவை மனப்பான்மையின்றி செயல்பட்டு சுயநலத்தால் தவறுகள் பெருகி விடக்கூடாது என்று அவர்களுடைய சேவையை  மதித்து  சம்பளம் கொடுத் தார்கள் .ஆனால் அதையும் வாங்கி கொண்டு சுயநலத்தால் தவறுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் இது ஜனநாயக நாட்டில் கூட ஆட்சியாளர்கள் சர்வாதிகார விருப்பமுள்ளவர்களாக இருப்பதைக்காட்டுகின்றது.

நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் பங்கேற்குமாறு அமைப்பை வலிமைப்படுத்தவேண்டிய பொறுப்பும் அதற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்காணித்து தடுக்கவேண்டிய கடமையும்  அரசாங்கத்திற்கு உண்டு. உண்மையில் எல்லோருக்கும் வேலை வாய்ப்பும் வருமானமும் இருக்கும் போது அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சிந்தனையில்லாதவர்களாக இருக்கின்றார்கள். அரசாங்கத்திற்கும் வரி வருவஈய் அதிகரிக்கின்றது. .ஒரு குறிப்பிட்ட பகுதியினரிடமிருந்து  வரியைத் தொடர்ந்து அதிகரிப்பதை விட எல்லோருக்கும் வேலை கொடுத்து எல்லோரிடமும் அளவான வரியை வசூலிப்பதால் வரிவருவாய் மக்களின் எதிர்ப்பின்றியே  அதிகரித்துக் கொள்ள முடிகின்றது வருவாய் மூலம் நாட்டின் அகக் கட்டமைப்பை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் . இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்து வதற்கு அடிப்படையாகவும் இருக்கவேண்டும்.உள்நாட்டுத் தேவைகளுடன் வெளிநாட்டுத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் திறமையை ஊக்குவிக்க வேண்டும். பொருளாதாரத்தால் உச்சம் தொட்ட நாடுகள் இதைத்தான் செய்தன  வாழ்வாதாரத்திற்க்காக மக்களை போராடவிட்டுவிட்டால் ,ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை மக்கள் அறிவதற்கான வாய்ய்பு இல்லாது போகின்றது என்பதால் ஆட்சியாளர்கள் மக்கள் எப்போதும் ஏதாவது பிரச்சனைகளால் அல்லல் படுமாறான சூழ்நிலையையே ஏற்படுத்துகிறார்கள் ஆட்சியாளர்களின் தவறான போக்கிற்கு அதிகாரிகள் மட்டுமன்றி சட்டம் ,காவல் துறையும் துணை போகின்றது. உழைப்புக்கு கிடைக்கும் ஊதியத்தை விட உபரியாகக் கிடைக்கும் கள்ளப் பணமே மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது. .இதனால் அவர்கள் வசதியுடன் வாழலாம்  ஆனால் பாதிக்கப்பட்ட சமுதாயம் வாழாமல் போகும் .அதை எதிர்ப்பதற்குத் தனிமநாதர்களுடைய எதிர்ப்பு பயனளிப்பதில்லை . சமுதாயம் விழித்துக் கொள்ளும் போது ,சுயநலத்திற்காக தவறுகள் செய்த அனைவரும் வாரிசுகள் இன்றி அழிந்துபோவார்கள்    

  

No comments:

Post a Comment