Monday, October 2, 2023

 .நல்லவை கேட்கின் (What are the best)

 


 

தலைப்பு: நல்லவை கேட்கின்

வெளியீட்டாளர் ? மணிவாசகர் பதிப்பகம், சென்னை

ஆண்டு: நவம்பர்  2004

மொழி : : தமிழ்                                                                                                                                  

கருப்பொருள்: நன்னெறி

பக்கங்கள் 136 விலை Rs.35

 

       வாழ்ந்து மறைந்து போன முன்னோர்களின் வார்த்தைகளும் அவர்கள்  அனுபவங்களை பின்வரும் தலைமுறையினருக்குப் பயன்படவேண்டும் என்று எழுதிவைத்த நூல்களும் தான் நமக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கின்றன .இவற்றைப் புறக்கணித்துவிட்டு வேற்று வழிகளில் நாட்டம் கொண்டு விலகிச் செல்வது நம் இளைஞர்கள் செய்யும் தவறாகும் .அவர்கள் அவர்களுக்கே ஏற்படுத்திக் கொள்ளும் முன்னேற்றத் தடைகள் என்பதை உணராத வரை இதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுஇந்நூல் பாதை தவறி நடக்கத் துணிவு துணிவு கொள்ளும் இளமைக் காலத்தில்  ஒருவருக்கு ஊட்டப்பட்டடேண்டிய ஒரு சில அறிவுரைகளைத் தொகுத்து வழங்குகின்றது

கற்ற கலவி என்றைக்கும் கைம்மண்ணளவே .எனவே கல்வி தேடுதல் என்பது வாழும் காலத்தில் ஒவ்வொருநாளும் மேற்கொள்ள அறிவுறுத்துகின்றது அதற்குச் சுய ஆர்வமும் ,பெற்றோர்களின் உதவியும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தேவை என்று தீர்வு சொல்கின்றது .சுய மதிப்பு ஒரு வலிமையான தூண்டற்காரணி அதை ஒவ்வொருவரும் அதை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அதற்க்கான வழிமுறைகளித்த தெரிவிக்கின்றதுபடைப்புத் திறனை வளர்த்துக் கொள்வதுடன் மனித நேயத்துடன் மற்றவர்களுடன் பழகவும் தெரிந்து கொள்ள வேண்டும் .உதவி செய்யும் மனப்பாண்மை இருந்தால்தான் உதவி பெறமுடியும்உயர்விற்கு ஒழுக்கத்தின் அவசியத்தைக் கட்டாயப்படுத்துகின்றது .இந்த ஒழுக்கம் ஆன்மிகத்தைப் போற்றுவதால் மட்டுமே பெறமுடியும்  ஆன்மிகத்தை அறிவியல்பூர்வமாக விவரிக்கின்றது .ஆன்மிகம் மட்டுமே எதிர்பார்பற்ற அன்பை வளர்கின்றது 

         இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும்  பிறருக்குச் சொல்லப்படும் அறிவுரைகளாக இல்லாது எனக்கு நானே ஏற்றுக்கொண்ட கொள்கையின் வரர்த்தைகளாக உள்ளது. எனக்கு கல்வி தேடுதல் பிடிக்கும் என்பதால் அதிகம் நூல்களை வாங்கிப் படிப்பேன் , நூலகங்களுகுச் செல்வேன் .ஆன்மிகம் பிடிக்கும் இதனால் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத் தேவையான ஒழுக்கம் மேம்படுகிறது படைப்பாற்றலை   வெளிப்படுத்த முயற்சியையும் வாய்ப்புக்களையும் தேடும் இயல்பை கல்வி தேடுதலும் ஆன்மிகத்தல் வளர்ந்த மனித நேயமும் ஊக்குவிக்கின்றன


No comments:

Post a Comment