Sunday, December 26, 2010

Arika iyarpiyal

மிதக்கும் பலூன் அமிழ்ந்து போனதேன் ?




எடை கட்டி தொங்க விடப்பட்ட ஒரு பலூன் ஒரு
நீர் தொட்டியில் நீரின் மேல் மட்டத்தைத் தொட்டுக்
கொண்டு முழுதும் அமிழ்ந்திருக்குமாறு
மிதக்கின்றது .பலூனை உள் நோக்கி அழுத்தினால்
பலூன் அமிழ்ந்து விடுகின்றது . ஏன் அப்படி ?.
                              ***************

காற்றடைத்த பலூன் மற்றும் கட்டித் தொங்க
விடப்பட்டுள்ள எடைக்கல் இவற்றின் எடைக்குச்
சமமாக அவற்றால் இடப்பெயர்வுக்கு ஆளான
நீரின் எடை இருக்கிறது .பலூனைச் சிறிது
உள்நோக்கி அமிழ்த்தினால் அவ்வாழத்தில் நீரின்
நிலை நீர்ம அழுத்தம் செயல்பட்டு பலூனை
இறுக்கத்திற்கு உள்ளாக்குகிறது. குறைவான அளவு
நீர் இடப்பெயர்ச்சிக்கு உள்ளாவதால் எடையை
ஈடுகட்ட முடியாது ,அப்பலூன் மேலும் அமிழ்ந்து
விடுகிறது .

No comments:

Post a Comment