Wednesday, December 22, 2010

arika iyarppiyal

நேரான இரும்புத் தண்டும்
வளைக்கப் பட்ட இரும்புத் தண்டும்


ஓர் இரும்புத் தண்டை வளைக்கும் போது செய்யப்பட்ட
வேலை அதில் நிலையாற்றலாக உறைந்திருக்கும்.இந்த
வளைந்த இரும்புத் துண்டை ஒரு பீக்கரில்
வைத்து அடர் கந்தக அமிலத்தை ஊற்றினால் அது
கரைகின்றது. அது சரி, அந்த நிலையாற்றல்
என்னவானது?
                                  ******************
 
 
.ஆற்றல் அழிவதில்லை .ஒரு வகையான ஆற்றல்
மற்றொரு வகையான ஆற்றலாக மாறுகிறது .
மிகத் துல்லியமாக மதிப்பிட முடியுமானால்
வளைந்த இரும்புத் துண்டு கரைந்த கந்தக
அமிலத்தின் வெப்பநிலை அதே அளவு விளையாத
இரும்புத்துண்டு கரைந்த கந்தக அமிலத்தின்
வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதை
உணரலாம் . வளையாத இரும்புத் துண்டு கந்தக
அமிலத்தில் விரைவாகக் கரைகிறது

No comments:

Post a Comment