1.ஒரு நீர்மத்தின் கொதிநிலையை மாற்ற முடியுமா ?
ஒவ்வொரு நீர்மத் திற்கும் ஒரு கொதி நிலை உண்டு.
இந்த வெப்ப நிலையில் நீர்மம் கொதித்து ஆவியாகும்.
கொதி நிலையை இயல் வளி அழுத்தத்தில் 
குறிப்பிடுவது வழக்கம்.ஒரு நீர்மத்தின் கொதிநிலையைக் 
கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியுமா ?
                                     ****************
2.உப்புத் தண்ணீரில் பருப்பு வேக அதிக நேரமாவதேன் ?
சமையலுக்கு உப்புத் தண்ணீரைப் பயன்படுத்தும்
போது சமைப்பதற்கு அதிக நேரமாகின்றது. அதனால் 
பருப்பு வகைகளைச் சமைத்துவிட்டு இறுதி நிலையில் 
உப்பைச் சேர்ப்பார்கள் .நீரில் உப்பைச் சேர்ப்பதால் 
சமைப்பதற்கு ஏன் அதிக நேரமாகின்றது ?
                                         *****************
1.ஆவியாதல் என்பது பொதுவாக நீர்மத்தின் பரப்பில் 
மட்டும் நிகழக்கூடியது. ஆவியாக்க வீதம் அல்லது பரப்பு 
இவற்றை அதிகரிப்பதினால் ஆவியாக்கத்தை அதிகரிக்க 
முடியும். ஆவியாக்கம் எந்த அளவிற்கு நீர்மப் பரப்போடு 
மட்டும் தொடர்புடையதாக இருக்கிறது என்பது அந்த
நீர்மத்தின் ஆவி அழுத்தத்தைப் பொறுத்தது. வெப்பநிலை 
அதிகரிக்க பொதுவாக ஆவியழுத்தம் அதிகரிக்கும். 
ஆவியழுத்தம், இயல் வெளி அழுத்தத்தை எட்டும் போது 
நீர்மம் கொதிக்கிறது . அப்போது ஆவியாக்கம் 
நீர்மத்தின் பரப்பில் மட்டுமின்றி பருமனில் எங்கும் 
நிகழ்கிறது . எவ் வெப்பநிலையில் ஆவியாக்கம் இப்படி ஏற்படுகின்றதோ,அவ் வெப்பநிலை, அந் நீர்மத்தின் 
கொதிநிலையாகும்.புற அழுத்தம் இயல்வெளி அழுத்தத்தை 
விடத் தாழ்வுறும் போது நீர்மத்தின் ஆவியழுத்தம் ,
அந் நீர்மத்தை தாழ்வான வெப்பநிலையில் 
கொதிநிலையை எட்டுமாறு செய்கிறது . அது போல 
புற அழுத்தம் இயல்வெளி அழுத்தத்தை விடக் கூடுதலாகும் போது ,நீர்மத்தின் ஆவி அழுத்தம் அந் நீர்மத்தை 
உயர் வெப்பநிலையில் கொதிநிலையைப் பெறச் செய்கிறது.
                                                         ****************
2.பருப்பு வகைகள் பொதுவாக கொதிநீரில் வேக
வைக்கப்படுகின்றன. இது மென்மையான காய்கறிகளைச் 
சமைப்பதைவிடச் சற்று கடினமானது.
பருப்பின் செல்களில் நீர் ஊடுருவி அதை விரிவடையச் 
செய்து உடையச்செய்வதால் பருப்பு மென்மையகி
விடுகிறது. நுண்துளை வழியாக நீர் 
ஊடுருவிச் செல்வது தடைப்படுமானால் பருப்பு வேக 
அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது .நேரில் உப்பைச் 
சேர்க்கும் போது கரைசலின்ஊடுபரவழுத்தம் காரணமாக 
பருப்பில் நீர் ஊடுபரவுதல் தடைப்படுகிறது .
மேலும் பருப்பிலிருந்து நீர் வெளியேறுவதும் இதனால் 
தூண்டப் படுகிறது . 
 

No comments:
Post a Comment