துளிகளாகப் பெய்யும் மழை
மழை என்பது மேகம் குளிர்விக்கப் படுவதால் நீராகச் சுருங்கி 
மீண்டும் பூமியில் விழுவதாகும். ஆனால் மழை பெய்யும் 
போது அருவி போல அல்லாது துளிகளாக 
விழுகின்றது .மழை அருவி போலக் கொட்டினால் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து நிகழும். ஏனெனில் அதன் 
நிலையாற்றல் மிகவும் அதிகம். நில அரிப்பு 
ஆங்காங்கே ஏற்படும் .கட்டடங்கள் பெரும் சேதமடையும். உயிரினங்களுக்குப் பாதுகாப்பாக இயற்கையே 
மழையை சிறு துளிகளாக விழுமாறு செய்துள்ளது .
இது எப்படி இயலுவதாகின்றது ?
                                           *******************
. மேகங்கள் நீர் மூலங்களிலிருந்து ஆவியாகித் திரண்டு 
தெவிட்டிய நிலையில் இருக்கும் . மேகங்கள் உருவாகும் 
போது  நீர்த்துளிகளின் விட்டம் 1 -10 மைக்ரான் 
(1 மைக்ரான் = 10 ^6 மீட்டர்)நெடுக்கையில் இருக்கும் . 
நீர்த் துளி உருவாக தூசி போன்ற கரு 
வேண்டும்.தட்ப வெப்ப மாறுதலால் ஒரு மேகம் 
விரிவடையும் போது அது ஒரு செங்குத்து திசை 
வேகத்தைப் ( 1 - 10 மீ/வி ) பெறுகிறது .அதனால் நீர் 
துளிகள் மேலேடுத்துச் செல்லப்படுகின்றன . மேலே 
செல்லச் செல்ல வெப்பநிலை குறைவதால் 
கூடுதலான தெவிட்டிய ஆவி நீர்த் துளிகள் மீது 
படிந்து பெரியதாக வளர்கின்றன .இந்த 
நடைமுறை மிகவும் மெதுவாக நடைபெறுகிறது . 
இரு நீர்த் துளிகள் மோதி இணையும் போது பெரிய 
கனமான நீர்த் துளிகள் உருவாகின்றன .
கனமான இவை மேலும் மேல் நோக்கிச் செல்ல 
முடியாததால் கீழே மழைத் துளிகளாக விழுந்து 
விடுகின்றன . அதாவது மேலெழுந்து செல்லும் 
காற்றால் மழைத் துளியின் மீது செயல்படும் இயக்க 
விசையை விட அதன் எடை அதிகமானால் நீர்த்துளி 
கீழே விழுந்து விடுகிறது .இதனால் 
மழை அருவி போலக் கொட்டுவதில்லை .

No comments:
Post a Comment