Tuesday, February 26, 2013

Creative thoughts


முடியும் என்பது முடியாது என்ற எண்ணம் எண்ணத்தில் இருக்கும் வரைதான் .முடியாதது என்பது பிறரால் செய்து முடிக்கும் வரை நம்மால் எது முடியாததோ அதுவாகும்.

முடியும் என்பதற்கும் முடியாது என்பதற்கும் அதிக இடைவெளி இல்லை .ஏனெனில் அவை இரண்டும் மனதின் ஒரே இடத்திலிருந்துதான் வெளிப்பட்டுத் தோன்றுகின்றன .ஒன்றிலிருந்து மற்றொன்றை எட்டுவது எல்லோருக்கும் இயலக்கூடியதுதான் .

அகத் திறமையைப் பெறும் ஆக்கப்பூர்வமான முயற்சியில் கொண்டுள்ள விருப்பத்தின் அளவால் முடிவதும்,முடியாததும் தீர்மானிக்கப்படுகின்றன

இயற்கையின் வரம்பிற்கு உட்பட்ட எதுவும் இயலும் .இயற்கைக்குப் புறம்பானவைகள் எதுவும் இயலுவதில்லை .நாம் செய்யத் தொடங்கும் வேலை எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்து கொண்டால் ,காலத்தை வீணாக்கும் நிலை ஏற்படாது .

பித்தளையைத் தங்கமாகும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் இறுதிவரை வெற்றி பெறாமல் போனதற்கு க் காரணம் இயற்கைக்கு அப்பாற்பட்டுச் செயல்பட்டதே ஆகும் .

இயற்கையை மிஞ்சிய ஒரு வலிமையான தூண்டுகோல் இந்தப் பிரபஞ்சத்தில் வேறெதுவும் இல்லை .இயற்கையைப் பார்த்துப் பார்த்துப் பாடம் கற்றுக் கொண்டால் மனிதர்களும் இயற்கையைப் போல வெல்லமுடியும்.

அனுபவங்களே செயல்களை நெறிப்படுத்துகின்றன .நெறிப்படுத்தப்பட்ட செயல்கள் யாவும் வெற்றிகரமாக முடிவடைகின்றன .

இடைத்தடைகள் இல்லாமல் உலகில் எதுவும் நடந்து முடிவதில்லை இடைத்தடைகள் என்பன புதிய வாய்ப்புக்களைத் தேடும் வாய்ப்புக்களைத் தருகின்றன.

வெற்றியின் ஒரு இரகசியம் நாம் நாமாக இருந்து கொண்டே செயலாற்றுவதுதான் .

முடியும் என்று சொல்லிவிட்டால் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும் .முடியாது என்று சொல்லிவிட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் .மனதை நீ ஆள்கின்றாயா இல்லை மனம் உன்னை ஆள்கின்றதா என்பதைப் பொறுத்து இது அமைகின்றது

No comments:

Post a Comment