Tuesday, February 26, 2013

Eluthatha Kaditham


எழுதாத கடிதம்

இந்தியா எதிர்பார்த்த மாதிரி முன்னேறவில்லை என்று பெரும்பாலானோர் நினைக்கின்றார்கள் .புரியாத புள்ளி விவரங்களை அடுக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்றோ இந்தியா அடுத்த 10,15,20.... ஆண்டுகளில் முன்னேறிவிடும் என்றோ விவரம் தெரியாத சாதாரண மக்களை நம்பும் படி செய்துவிடலாம். சில பல காரணங்களைச் சொல்லி .கால எல்லையை நீட்டித்து கொண்டே போவதால் மக்கள் புரியாமல் இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்றாலும் முழுமையான புரிதல் யாரிடமும் இல்லை .

மனித வளமே முதலீட்டைக் காட்டிலும் ,நவீன சாதனங்களைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளது.முதலீடு இல்லாவிட்டாலும் ,சாதனங்கள் இல்லாவிட்டாலும்,மனித வளம் இருந்தால் சாதிக்கும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் இந்த மனித வளம் தூரதிருஷ்ட்டவசமாக அதிகமாக வீணடிக்கப் படுகின்றது.ஒரு நாடு தன் மனித வளத்தை மிகப் பெரிய சுமையாகவும்,பாரமாகவும் நினைக்காமல் மிகப் பெரிய சொத்தாக நினைக்கவேண்டும்.இந்த எண்ணம் எல்லோரிடமும் சிறந்து விளங்க அரசியல் தலைவர்களே முன் உதாரணமாகத் திகழவேண்டும் .பிற வளங்கள் அனைத்தையும் இழப்பதற்காக மனித வளத்தைத் தவறாகப் பயன்டுத்திக் கொள்வதை மாற்றிக் கொள்ள எல்லோரும் முன் வரவேண்டும் .சீனா மனித வளத்தை நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதில் முதலிடத்தில் இருக்கின்றது.இருப்பும் அதிகம்,ஏற்றுமதியும் அதிகம் அது நிலையான முன்னேற்றத்தின் அறிகுறி. நாம் அப்படியில்லை,முன்னேறாவிட்டால் அதற்குக் கையிருப்பில் உள்ள காரணங்களை அடுக்கி வைப்போம்.நம்முடைய முன்னேற்றம் நிலையில்லா முன்னேற்றம். விழித்துக் கொள்ள வேண்டிய இறுதிக் கால கட்டத்திலும் விழித்துக் கொள்ளா விட்டால் நமக்கு பொழுது விடியாமலேயே போய்விடலாம்.

No comments:

Post a Comment