Tuesday, September 7, 2010

vanna vanna ennangal-14

கணக்குப் பாடமும் வாழ்க்கைத் தத்துவமும்


"காவேரி"



1 + ௦0 = 1

ஒன்றும் சுழியும் சேர்ந்தால்

என்றும் மாற்றமில்லை

பாழான எதுவும் உனக்கு

பயன் தருவதில்லை

1 x 0 ௦ = ௦0

சுழியோடு ஒன்றைப் பெருக்கினால்

எல்லாம் சுழியாகும்

தீயாரோடு பழக்கம் மிகுந்தால்

உன் வாழ்க்கை பாழாகும்

1 + 1 = 2

ஒன்றோடு ஒன்றைக் கூட்டினால்

அதன் அளவு அதிகமாகும்

ஆணும் பெண்ணும் சேர்ந்தால்

அதுவே வளரும் குடும்பமாகும்

1/0 = ∞

ஒன்றைச் சுழியால் வகுத்தால்

விளைவது அனந்தமாகும்

எதையும் வகுத்துவிட்டால்

வருவது ஆனந்தமாகும்

1 +∞ = ∞

ஒன்றோடு அனந்தம் சேர்ந்தால்

அந்த ஒன்று மறைந்துபோகும்

தேவைக்கு மேல் பொருள் சேர்த்தால்

அப்பொருளும் பொருளில்லாது போகும்

No comments:

Post a Comment