Saturday, October 20, 2012

kavithai


எங்கோ போகுது இந்த உலகம்

 

 கடவுள் இல்லையென்று ஒருநாள்

வெளியே பகுத்தறிவு சொல்கிறது

கடவுள் வேண்டுமென்று மறுநாள்

உள்ளே உள்ளுணர்வு கெஞ்சுகிறது

 

எனக்கு உதவாத எதிரிக்கு உதவும்

கடவுள் பகுத்தறிவில் மறைந்தார்

எதிரிக்கு உதவாத எனக்கு உதவும்

கடவுள் உள்ளுணர்வில் நிறைந்தார்

 

வேண்டும் வேண்டாம் சிலநேரம்

கடவுளின் கதையே இதுதான்

பகுத்தறிவு முழுதாய் நம்பாது

உள்ளுணர்வு முழுதாய்  நம்பும்

 

முன்னது அறிவியல் பின்னது ஆன்மிகம்

பின்னது நீர் முன்னது நெருப்பு

அது சட்டமென்றால் இது தர்மம்

இது மூளையென்றால் அது இதயம்

 

பகுத்தறிவுக்கும் உள்ளுணர்வுக்கும்

ஒவ்வொருநாளும் ஓயாத சண்டைகள்

ஒவ்வொருவருக்கும் தீராத பிரச்சனைகள்  

ஒருநாட்டுக்கு அதுவே மாறாத சிக்கல்  

 

மௌனமாய் மனதிற்குள் நடக்கும் போராட்டம்

மக்கள் மன்றத்தில் நித்தம் அரங்கேறுது

ஒரு கூட்டம் எல்லாவற்றையும் நம்புது

ஒரு கூட்டம் எல்லாவற்றையும் மறுக்குது

 

முன்னோர் அடிமைகளானார் பின்னோர் எதிரிகளானார்

இவர்கள் முட்டாளென்றால் அவர்கள் புத்திசாலியில்லை

அவர்கள் புத்திசாலியென்றால் இவர்கள் முட்டாளில்லை

முட்டாள்கள் அதிகமானால் புத்திசாலிகள் பயனில்லை

எங்கோ போகுது இந்த உலகம்

No comments:

Post a Comment