Monday, September 20, 2010

vinveliyil ulaa -1

விண்வெளி உலா -1


ரிக் வேதத்தில் வானவியல்

இன்றைய வானவியல் கிருத்து பிறப்பிற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிதகோரஸ்(Pythagoras ) என்ற கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானியிலிருந்து தொடங்கியது எனலாம். இவரே முதன் முதலாகப்
பூமி உருண்டையானது என்று தெரிவிதவராவார். அதற்குப் பிறகு 200 ஆண்டுகளுக்குப் பின் வந்த அரிஸ்டாட்டில், சந்திர கிரகணத்தின்
போது நிலவின் பரப்பில் ஒரு வட்டவில் போல விழும் பூமியின் நிழலைக் கண்டு பூமியின் உருண்டை வடிவத்தை உறுதிப்படுத்தினார் .
எனினும் அரிஸ்டாட்டில் பூமியே இப் பேரண்டத்தின் மையம் எனவும் , சந்திரனும் சூரியனும் பிற கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்றும், இதற்கும் அப்பால் விண்மீன்கள் சுற்றி வருகின்றன என்றும் தெரிவித்திருந்தார் .அவர் காலத்தில் அவர் மிகச் சிறந்த தத்துவ
ஞானியாக எல்லோராலும் மதிக்கப்பட்டு வந்தார் என்பதால்,
அவருடைய கருத்தை மக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டனர்.
அவருக்குப் பின் வந்த தாலமியும் (Ptolemy ) இக் கருத்தில் மாற்றம்
ஏதும் செய்யவில்லை . அரிஸ்டாடிலின் இத் தவறான கொள்கைகள் எறத்தாழ 1600 ஆண்டுகாலங்கள் வரை அப்படியே உலகில் நிலவி
வந்ததன.16 - நூற்றாண்டில் கோபர்நிகஸ் (Copernicus ) சூரியக்
குடும்பத்திற்கு புதிய வடிவம் கொடுத்தார். அதுவரை பூமியை
மையமாகக் கொண்டு சூரியனும் பிற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற பழமையான கருத்துக்கு எதிராகச் சூரிய மையக் கருத்தைத் தெரிவித்தவர் இவரேயாவார் .

பிதகோரசுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் ஈர்ப்பு
பற்றித் தெரிந்திருந்தார்கள் .இதற்கு அவர்கள் நிறை மிக்க சூரியனே சூரியக் குடும்பத்தின் மையமாக இருக்க முடியும் என்று கூறி
இருப்பதே சான்றாக உள்ளது.கெப்ளருக்கு 1000 ஆண்டுகளுக்கு
முன்னரே கோள்களின் சுற்றுப் பாதை நீள் வட்டமாக இருக்க
வேண்டும் என்று தீர்மானித்தவர்களும் இந்தியர்களே .கிருத்து
பிறப்பிற்கு முன் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட
ரிக் வேதத்தில் இந்திய வானவியலாரின் வல்லமை தெரிய வருகிறது .

வேத கால ஆரியர்கள் சூரியன், விண்மீன், வால்மீன் போன்ற விண்ணுருப்புகளைத் தெளிவாக வரையறுத்துள்ளனர் .ஆனால் இந்தியாவில் வானவியல், கிரக சோதிடமாக விரிவடைந்தது.
அதனால் கிரகங்களைத் தெய்வங்களாக மதிக்கத்
தொடங்கினர் .சூரியனும் சந்திரனும் ,பிற கோள்களும்
பூமியில் பிறக்கும் மனிதர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக நம்பினார்கள் .இந்த நம்பிக்கை இந்திய மக்களிடையே
இன்றைக்கும் தொடர்வதைக் காணமுடிகிறது .இது
வானவியல் துறையில் ஆக்கப்பூர்வமான நம்முடைய
வளர்ச்சியைப் பெரிதும் மட்டுப்படுத்திவிட்டது என்றே
சொல்லவேண்டும் .

வேதத்தில் சூரியன், ஒளி மற்றும் வெப்பத்தின் ஆற்றல்
மூலமாகவும் பூமியில் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் ,
பரிணாம வளர்ச்சிப்படி களின் மையமாகவும் ,கோளத்தின்
மையமாகவும் கற்பிக்கப்பட்டுள்ளது .இது கிரேக்கர்களின்
சூரிய மையக் கருத்துக்கு முன்னோடியாக உள்ளது.
சமஸ்கிருதத்தில் ஒரு வரி

" சர்வ தீட்ஷனம் ,சூரியகம் சூரியஹா சூர்யா "

இதன் அர்த்தம் என்னவென்றால் ,'எல்லாத் திசைகளிலும்
சூரியன்கள் இருக்கின்றன ,இரவு நேர வானில் இவை எங்கும் நிறைந்திருக்கின்றன ' இது விண்மீன்கள் எல்லாம்
சூரியனைப் போன்ற விண்ணியல் உறுப்புகள் என்பதை
இந்தியர்கள் தெரிந்திருந்தார்கள் என்பதைப் பறை சாற்றுகிறது.
வேதம் விண்மீன்களை நட்சத்திரங்கள் எனக் குறிப்பிடுகின்றது

11 -ம நூற்றாண்டில் மெசபடடோமிய்ர்கள் வானவியல் பற்றி
 எழுதி வைத்த பல கருத்துகள் ரிக் வேதத்தில் சில வரிகளில்
 அப்படியே காணப்படுகின்றன .சூரியோதையம் ,
விண்மீன்களின் வட்டாரக் கூட்டம் (constellation ) பற்றியும், அதன் அடிப்படையில் அமைந்த ஆண்டுக் கால அட்டவணை
( ஆண்டுக்கு 12 மாதங்கள் ,ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என
360 நாட்கள் ) பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ள ஒத்த
கருத்துக்களில் இது வெளிப்படையாகத் தெரிகிறது .
சூரிய உதய நேரத்தில் காணப்படும் சுற்று முறையிலான
ஏற்றத் தாழ்வு மாற்றங்கள் பற்றி ரிக் வேதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளன .

ஆரியப்பட்டர் என்ற பழங்கால இந்திய வானவியல் வல்லுநர் ,ஆரியப்பட்டியா என்ற தம் நூலில் கோளக
வானவியல் பற்றி (spherical astronomy ) விளக்கியுள்ளார் .
இதில் இந்துக்களின் கால ஆண்டு ,சந்திர -சூரிய
கிரகணங்கள் ஏற்படும் காலம், விண்ணுருப்புகளின்
சுற்று முறையிலான இயக்கங்கள் பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது .இதில் விண்மீன்கள் சுற்றி
வருவதற்குக் காரணம் பூமியின் தற்சுழற்சி இயக்கம் எனக் கூறப்பட்டுள்ளது .கோள்களின் சுற்றுப்பாதை அதன்
சுற்றுக்காலத்தைப் பொறுத்தது என்றும், கோள்களின்
இருப்பிடம் பற்றி அறிய புதிய வழிமுறைகளும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன .கூலின் சுற்றுப் பாதை நீள்
வட்டமானது என்று முதலில் தெரிவித்திருப்பதும் இவரே
ஆவார்.நிலவின் ஒளி ,சூரிய ஒளியின் பிரதிபலிப்பால்
வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .ராகு என்ற
பாம்பு விழுங்குவதால் சந்திரகிரகணம் ஏற்படவில்லை
என்றும் அது பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால்
உண்டாகிறது என்றும், ஊர் ஆண்டு என்பது 365 நாட்கள் 6
மணி 12 நிமிடம் 30 வினாடி என்றும் இதில்
குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த ஆரியப்பட்டியா நூல்
13 -ம நூற்றாண்டில் இலத்தீன் மொழியில் எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டது .ஆரியப்பட்டவிற்குப் பிறகு பாஸ்கரா,
வராகமித்ரா ,பிரும்ம குப்தா போன்ற வானவியல் அறிஞர்கள் தோன்றினார்கள் .வராகமித்ரர் ,ஈர்ப்பு விசை பற்றிய இயற்பியல் உண்மைகளை முதல் முதலாகத் தெரிவித்துள்ளார்

பழங்காலத்திய இந்திய வானவியல் கணிதவியல்
அடிப்படையில் மட்டுமே இருந்தது .தொலை நோக்கி
போன்ற கருவிகள் பற்றி ஏதும் தெரியாதிருந்தனர்.
வானவியல் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி
அடையாமல் போனதற்குக் காரணம் தாங்கள் கண்ட
உண்மைகளை முறையாகப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டது மட்டுமின்றி ,பதிவு செய்தனவற்றையும் முதன் முதலாக
உலகிற்கு எடுத்துக் கூறாது போனதும்தான்

மேலும் வானவியலை அறிவியலுக்கு அப்பாற்பட்ட
வான சோதிடமாக வளர்ச்சியுற அனுமதித்துவிட்டதால் ,
உண்மையான திசை தடுமாறிப்போனது.

1 comment:

  1. மேலும் வானவியலை அறிவியலுக்கு அப்பாற்பட்ட
    வான சோதிடமாக வளர்ச்சியுற அனுமதித்துவிட்டதால் ,
    உண்மையான திசை தடுமாறிப்போனது.

    இதற்கு மேலும் ஏதோ ஒன்று நம்மக்களின் கண்டுபிடிப்புகள் திசை மாறியதற்கு காரணம் இருக்கக்கூடும்.

    ReplyDelete