Wednesday, August 10, 2011

Arika ariviyal

சந்திரனில் நீரை ஊற்றினால் ....


ஒரு விண்வெளி வீரர் நிலவுக்குச் சென்று ,அங்கு ஒரு சோதனை செய்கிறார் .தன்னுடைய வெப்பக் காப்பு செய்யப்பட்ட குடுவையிலிருந்து 20 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் உள்ள நீரை ஒரு பீக்கரில் ஊற்றுகிறார் .அப்போது என்ன நிகழும் ?

***************

பூமிக் கிரகணம்

சூரிய கிரகணம் என்பது நிலவு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதால் நிலவு சூரியனை மறைக்க விளைவதாகும் .சந்திர கிரகணம் என்பது போமியின் நலளுக்குள் சந்திரன் நுழைய விளைவதாகும் .நிலவில் இருந்து கொண்டு பூமி சூரியனை மைக்கும் பூமிக் கிரகணத்தைக் காண முடியுமா ?



நிலவில் வளிமண்டலம் ஏதுமில்லை .எனவே வலி மண்டல அழுத்தம் சுழியாக இருக்கும். இச் சூழலில் நீர் தாழ்ந்த வெப்ப நிலையிலையே கொதித்து ஆவியாகும். அதற்குத் தேவையான உள்ளுறை வெப்பத்தை நீரிலிருந்தே எடுத்துக் கொள்வதால், நீரானது விரைந்து குளிர்சியுற்று பனிக் கட்டியாக உறைந்து விடுகிறது.



சூரிய கிரகணத்தை பூமியிலிருந்து நோக்கும் பொழுது நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும். அதே காலத்தில் நிலவிலிருந்து பூமிக் கிரகணத்தைப் பார்க்கலாம். அதாவது பூமி நிலவின் நிழலுக்குள் நுழைந்து மறைவதாகும். ஆனால் நிலவின் அளவு பூமியைக் காட்டிலும் ஓரளவு சிறியது. பூமியின் சராசரி ஆறாம் 6370 கிமீ ,நிலவின் ஆறாம் 1738 கிமீ . எனவே முழு மறைவு என்பது இல்லை. பூமிக் கிரகணம் சந்திரனின் கலைகள் போலத் தோன்றும்.

சந்திர கிரகணத்தை பூமியிலிருந்து பார்க்கும் பொது.நிலவிலிருந்து சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்.அப்போது பூமி சொரியனுக்கும் நிலவிற்கும் இடையே இருக்கும். .



No comments:

Post a Comment