Monday, August 15, 2011

arika iyarpial

வெற்றிடமும் விண்ணுருப்பும்


 
இந்தப் பேரண்டம் எல்லையற்றது .இதில் பத்தாயிரம் கோடி அண்டங்கள் உள்ளன . ஒவ்வொரு அண்டத்திலும் பத்தாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. பல விண்மீன்களுக்குச் சூரியனைப் போல குடும்பம்
இருக்கலாம் .இருப்பினும் அண்ட இடைவெளி ஏறக்குறைய வெற்றிடம் தான் .இந்த வெற்றிடத்தால் ஏன் துகள்களும் விண்ணுருப்புகளும் உறிஞ்சப்படுவதில்லை?

                                *****************
பூமி சூரியனைச் சுற்றி வர செய்யப்படும் வேலை




பூமி சூரியனைச் சுற்றி ஒரு வட்டப் பாதையில் இயங்கிச் செல்ல அதன் மீது ஒரு விசை செயல் படுகிறது .எனவே இவ் விசையால் பூமியின் மீது ஒரு வேலை செய்யப்படுகிறது எனலாம். அப்படிஎன்றால் பூமியின் நிலையாற்றல் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். இது சரியா.?

                        ***************

வெற்றிடத்தால் ஒரு பொருள் உறிஞ்சப்படுவதற்கு முக்கியக் காரணம் அழுத்தச் சரிவாகும். தாழ்ந்த அழுத்தமுள்ள பகுதியை நோக்கி உயர் அழுத்தமுள்ள பகுதியிலுள்ள பொருள் இயங்கிச் செல்கிறது. வெற்றிடத்தில் அழுத்தம் சுழியாக இருப்பதால் பொருள்கள் அதை நோக்கிச் செல்கின்றன. அண்டவெளியில் அடர்த்தி மிகவும் சொற்பம். அனவே நீண்ட தொலைவிற்கு பெரிய அளவில் அழுத்தச் சரிவு இல்லை. அதனால் அதன் பொருட்டு பேரளவிலான விண்ணுருப்பின் இயக்கமும் இல்லை எனலாம். மேலும் இந்த அழுத்தச் சரிவும் எல்லாத் தேசைகளிலும் இருப்பதால்.உயர் மற்றும் தாழ்ந்த அழுத்தப் பகுதிகளிடையே இயக்கம் இருப்பதில்லை.


                              *************


மைய நோக்கு விசை காரணமாக வேலை ஏதும் செய்யப்படுவதில்லை. ஏனெனில் செயல்படும் விசை இயங்கு தெசைக்கு ஒவ்வொரு கணமும் செங்குத்தாக இருக்கிறது. மைய நோக்கு விசையும் அதற்குச் சமமாக இருக்கும். மைய விலகு விசையும் ஒரு பொருள் வட்டப் பாதையில் நிலையாக இயங்கிச் செல்ல தேவையாக இருக்கிறது .



No comments:

Post a Comment