Monday, August 20, 2012

Cartoon

cartoon அமைச்சர்: அரசே, நாட்டில் விலைவாசி உயர்ந்து வருவது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக நேற்று கூறியதைக் கேட்டு மக்கள் கொதித்துப் போயிருகின்றார்கள் . அரசன் : விவசாயிகளுக்கு க் கூடுதல் இலாபம் கிடைக்கும் என்பதற்காக அப்படிச் சொன்னேன் . நம் நாட்டில் அரசியல் தலைவர்கள் இப்படியும் சொல்லலாம் முன்னர் :பால் விலை யை உயர்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. பின்னர் : பசு மாடுகளுக்கு கூடுதல் தீவனம் வாங்கிக் கொடுக்கலாமே என்பதற்காகச் சொன்னேன் . முன்னர்: பெட்ரோல் விலை அதிகரித்தது மன மகிழ்ச்சி யளிக்கிறது பின்னர்: அதனால் கார் வாங்குவோர் குறைய சாலை விபத்துக்களும் குறையும் என்பதற்காகச் சொன்னேன். முன்னர்: ரயில் கட்டணம் உயர்த்தியது நல்லதற்கே பின்னர்: ரயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சி மூட்டைப் பூச்சி இல்லாமல் சுத்தப்படுத்த பயன்படும் என்பதற்காகச் சொன்னேன். முன்னர்: மின்சாரக் கட்டணத்தை க் கூட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. பின்னர்: மின்சாரத்தைக் குறைவாகப் பயன் படுத்துவதால் இனி மின் கசிவால் தீ விபத்துகள் இல்லாதிருக்கும் என்பதற்காகச் சொன்னேன்.

No comments:

Post a Comment