Wednesday, August 15, 2012

Kavithai

மாற்றம்
எவ்வளவோ மாற்றங்கள் ஒருநாளில் அவ்வளவும் ஏற்றங்கள் மறுநாளில் மாற்றமின்றி ஏற்றமில்லை எந்நாளும் தாக்கமின்றி மாற்றமில்லை ஒருநாளும் இன்று விழுந்துகிடக்கும் கூழாங்கற்கள் இருபதாண்டானாலும் உயரச் செல்வதில்லை அருகில் சிதறிக்கிடக்கும் சிறுவிதைகள் அடுத்தநாளே முளைவிட்டுச் சிரிக்கின்றன உறங்கிய கல்லுக்கு எழுச்சியேயில்லை வீரிய விதைக்கு உயர்ச்சியே எல்லை மாற மறுத்தவன் வெறுமையானான் மாறி மலர்ந்தவன் அருமையானான்
ஓடும் ஒரு கடிகாரம் ஒருநாளில் எண்பத்தாறாயிரத்து நானூறு முறை ஓயாது உன்னை உசுப்பிக் கொண்டிருக்கிறது விழித்துக் கொள்ளாவிட்டால் வெல்வதேது? ஒருநாளில் ஒருலட்சம் முறை உன்னிதயம் தூங்காது துடிக்குது ஏழாயிரம் லிட்டர் இரத்தத்தை எக்கி எக்கித் தள்ளுது ஆயிரம் லிட்டர் இரத்தத்தைச் சுத்திகரிக்கின்றன சிறுநீரகங்கள் பத்தாயிரம் லிட்டர் காற்றை சுவாசிக்கின்றன நுரையீரல்கள் பூமிசுற்ற நாமும் நடுவரைக்கோட்டில் நாற்பதாயிரம் கிலோமீட்டர் நகர்கிறோம் இத்தோடு சூரியனைச்சுற்றி வலமாய் இரண்டரை லட்சம் கிலோமீட்டர் ஒரு நாளில் பலகோடி கிலோமீட்டர் ஊடகத்தில் ஒளி பாய்ந்து செல்கிறது ஒருநாள் மாற்றத்தில் உலகமேமாறுது வாழ்நாளில் மாற்றமின்றி இருக்கலாமோ.

No comments:

Post a Comment