Friday, March 15, 2013


எழுதாத கடிதம்

இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி ,கை கால்களைக் கட்டி ,கீழே தள்ளி விட்டு சுட்டுக் கொன்ற காட்சியை தொலைக் காட்சியில் காண்பித்தார்கள் .ஐயகோ .இந்தக் கொடூரமான காட்சியைக் காண கண்கள் இல்லாமலேயே இருந்திருக்கலாம் ..பட்டியலிட்ட தீவிரவாதிகள் கூட கொஞ்சம் இரக்கம் காட்டுவார்கள் . ஈழத் தமிழர்களை க் கொடூரமாகக் கொலை செய்தததால் பட்டியலிடப்படாவிட்டாலும் இலங்கை இராணுவத்தினரும் தீவிர வாதிகளே .இவர்கள் சாதாரணத் தீவிரவாதிகள் இல்லை, மிக மிக மோசமான தீவிரவாதிகள் .பிரபாகரனின் செயல்களுக்கு போர் முறையில் ஒரு அர்த்தம் இருந்தது .ஆனால் ராஜபக்சே யின் அத்துமீறல்களில் அநியாயமே மிகுந்திருந்தது .உண்மையான தீவிரவாதி யார் என்பதை இனி ஐநாதான் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் .

No comments:

Post a Comment